பாடல் – 55

அருமறை காவாத நட்பும் பெருமையை
வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும்
செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர்
ஒற்றாள் எனப்படு வார்.

(இ-ள்.) அருமறை – பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடா மறை மொழியை, காவாத – காப்பாற்றாத, நட்பும் – நட்பாளனும்; பெருமையை – பெருமைக்குணத்தை, வேண்டாது, விரும்பாமல், விட்டு – தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, ஒழிந்த – தருமத்தினின்றும் நீங்கிய, பெண்பாலும் – பெண்ணும்; யாண்டானும் – எங்காயினும், செற்றம்கொண்டு – கோபங்கொண்டு; ஆடும் – அவன்மேல் குற்றங் கூறுகின்ற, சிறு தொழும்பும் – குற்றலாளனும்; இ மூவர் – ஆகிய இம் மூவரும், ஒற்றாள் எனப்படுவார் – ஒற்றர்களை ஒப்பரென்று சொல்லப்படுவார்; (எ-று.)

(க-ரை.) ஒருவன் மறைமொழியை வெளிப்படுத்தும் நண்பனும், உள்ள பெருமையும் ஒழிக்கக்கருதும் பெண்ணும் தலைவரிடம் பகை பாராட்டும் வேலையாளனும் ஒற்றரை ஒத்தவர் என்பது.

அருமறை – அருமை மறை. அருமை – சொல்லக்கூடாமை. மறை – மறைக்கப்படுவது; செயப்படுபொருள் விகுதி புணர்ந்து கெட்டது. நட்பு, தொழும்பு; அவற்றையுடையவர்க்கு ஆகுபெயர். பெருமை – ஒரு பெண்ணுக்குக் கற்பால் உண்டாகும் பெருமை. அறத்தின் நீங்கிய பெண் உருவில் மட்டும் பெண்ணே என்பார் பெண்பால் என்றார். யாண்டு என்பது தன் தலைவனுக்குப் பகைவர் அயலார் நட்பினராகிய இடம். ஆன் : ஆயின் என்பதன் மரூஉ. ஆடுதல் – பேசுதல். ஒற்றாள் : இரு பெயரொட்டுப் பண்புத்தொகை.

ஒற்று – துறந்தார்முதலியமாற்றுருக்கொண்டு பகைவரிடஞ்சென்று ஒன்றுபட்டு அங்கு நடப்பனவற்றை ‘அறிந்துவந்து உரைப்பவர். ஒற்று : முதனிலைத் தொழிலாகுபெயர்.

முன் பக்கம் செல்ல…    தொடரும்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »