கம்பனின் கவியாற்றல் ஒரு வியப்புக்குறியாகவே இன்றளவும் உள்ளது.

தமிழ் மொழியைக் கையாண்ட விதம், சொற்களை சொக்கட்டான் போல் விளையாடி கையில் எடுத்து கவிதைக்குள் பின்னி வைத்த அழகு வெறும் வார்த்தைகளால் நம்மால் சொல்ல முடியவில்லை. அவ்வளவு திறன்மிகு படைப்பு இராமாயண காவியம். இலக்கியம் என்று சொன்னால் இலங்கு பொருள் எடுத்தியம்பும் நயம் என்றே சொல்லலாம்.

மூக்கறுபட்ட சூர்ப்பனகை இலங்கைமாநகர் அடைந்து தனது சோகக் கதையை அண்ணன் இராவணனிடம் கூறும் போது சீதையின் பேரெழிலை பலவாறு எடுத்துச் சொல்லி இராவணனுக்கு காமப் பசியைத் தூண்டுகிறாள். அளவிலா ஆசைத் தீ வளர்க்கிறாள் இராவணன் மனதில்.

இங்கே பாருங்கள் தனது மூன்று பழிகளைத் தீர்த்துக் கொள்கிறாள் சூர்ப்பனகை.

ஒன்று காதல் மணமுடித்த தனது கணவான் வித்யுஜ்ஜிஹ்வாவை ஏற்கனவே கொன்ற இராவணனைத் தரைமட்டம் ஆக்குவது இரண்டாவது மகன் சாம்பன் காட்டில் கடுந்தவம் இருக்கும் நேரத்தில் தர்பைப்புல் அறுக்கச் சென்ற இலக்குவன் சம்பனின் தலையையும் சேர்த்து அறுத்துவிட்டான். ஏற்கனவே கணவனை இழந்த துயரம் மேலும் மகனையும் இழந்தால் சூர்ப்பனகை. அடுத்து மூன்றாவதாக இராமன் மீது காதல் வயப்பட்டு அடைய முடியாததை சீதை எனும் பேரழகியின் இருத்தல் என்பதையும் தனது தீ எண்ணத்தால் ஒரு முப்பரிமாண பழிவாங்கலில் செயல்படுகிறாள் சூர்ப்பனகை.

சீதையின் எழில் தோற்றத்தை கம்பன் சூர்ப்பனகை வழி சொல்லும் போது…

“இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!”
(சூர்ப்பனகை சூழ்ச்சிப் படலம் 75)

“இந்திரன் சசி தேவியை பெற்றான், இரு மூன்று, ஆறு முகம் கொண்டவனின் தந்தையாகிய சிவன் உமாதேவியைப் பெற்றான்,
தாமரை போன்ற சிவந்த கண்களை பெற்ற திருமாலோ திருமகளைப் பெற்றான். நீ சீதையைப் பெற்றால்… அந்தரம் (அந்த தர வரிசையைப்) பார்க்கின் நன்மை அவர்களுக்கெல்லாம் இல்லை, உனக்குத்தான் ஐயா” என்று கூறுகிறாள்.

இங்கே சற்று காற்புள்ளியை மாற்றி இடுங்கள்……

அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு, இல்லை உனக்கே ஐயா
அந்த தரம் பார்த்தால் நன்மையெல்லாம் அவர்களுக்கே ஆனால் சீதையை நீ பெற்றால் தரம் இல்லை உனக்கே ஐயா என்றும் பொருள் கொள்ளலாம்.

அந்தரம் பார்க்கு இன்னல் மை
அவர்க்கில்லை, உனக்கே ஐயா!
(அந்தரம்- ஆகாயம், பார்- பூமி, இன்னல்- துயரம், மை- குற்றம்)
‘ராவணா! நீ! சீதையைப் பெற்றால் ஆகாயத்திலும் பூமியிலும், துயரமும் குற்றமும் உனக்கே உண்டாகும்’ என்பதே சூர்ப்பனகையின் உண்மையான வாக்கு.
வஞ்சமகள் சூர்ப்பனகையின் எண்ணம் இங்கே கடைசி இரண்டு வரிகளில் பிரதிபலிக்கிறார் கம்பர். இப்படிப் பல பாடல்களில் கம்பனின் கவித்திறன் மேலோங்கி நிற்கிறது கம்பராமாயணத்தில்.

 

கண்ணதாசனும் கவித்திரனில் சலித்தவனா… இல்லையில்லை இவனும் கம்பனின் வரிகளில் பாதித்து ஒரு தரவரிசையை தனது “ பாலக்காடு பக்கத்திலே “ என்ற பாடலில் தருகிறான்…..

 

பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான்
பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான்
ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா (படம் : வியட்நாம் வீடு)

இன்னும் ரசிப்போம் ருசிப்போம் கம்பன் கவிநயத்தை !

தொடர் 10
தொடர் 12


1 Comment

Nageswaran · ஏப்ரல் 16, 2023 at 7 h 23 min

அற்புதம்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 20

தொடர் 20

வெண்பா ஆசிரியப்பா இரண்டு பற்றியும் தெரிந்து கொண்ட நாம் அடுத்ததாக கலிப்பாவைக் காண்போம்.

இது 3 ஆவது பாவகை

மாமுன் நிரை
விளமுன் நேர்
காய்முன் நேர் இவை வெண்பா

நேர்முன்நேர்
நிரைமுன் நிரை
நேர் முன் நிரை
நிரை முன் நேர் இவை ஆசிரியப்பா

ஆனால் கலிப்பாவில்

காய்முன் நிரை வரும்
அதாவது கலித்தளை மிகுந்து வரும்
மற்ற தளைகள் குறைந்து வரலாம்
புளிமாங்காய் கருவிளங்காய் அதிகம் வரும்
கனிச்சீர்கள் வாரா
அளவடிகளால் ஆனது

கலிப்பா மற்ற பாக்கள் போல ஒரே உறுப்புகள் கொண்டமையாமல் பல உறுப்புகள் உடையது.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 20  »

இலக்கணம்-இலக்கியம்

கவிதைக்கழகு இலக்கணம் – 19

தொடர் 19

வெண்பாதான் கடினம் என்று புலவர்கள் சொல்வதுண்டு. வெண்பாவில் சிறப்பாக எழுதுபவர்களை வெண்பாப் புலி என்றும் அழைக்கப்படுவார்கள். நிறைய தமிழ் நூல்கள் வெண்பாவில் புனையப் பட்டுள்ளன. நீங்களும் இப்போது வெண்பா எழுத முற்பட்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.

 » Read more about: கவிதைக்கழகு இலக்கணம் – 19  »