ஏழை மாணவர்களுக்கு
எழுத்தறிவித்த இறைவன்!
இலவச மதிய உணவுத் திட்டத்தால்
எங்களின் வயிற்றுப் பசியை மட்டுமல்ல
அறிவுப்பசியையும் தந்தாயே…
தென்னாட்டுக் காந்தியே… காமராசா !
பகுத்தறிவு பகலவனாய் பெண்களுக்கு
சுயமரியாதை இயக்கம் கொடுத்து
சமூக நீதிக்கு அடையாளம் கொடுத்தாயே
வைக்கம் வீரனே தந்தைப் பெரியாரே…!
இருமொழிச்சட்டம் கொணர்ந்து
மொழி இலக்கோடு பயணம் தொடங்கி
சென்னை மாகாணத்தை தமிழ்நாடென
தலைநிமிரச் செய்தாயே அறிஞர் அண்ணாவே…!
காட்டுப்பன்றிகள் குதறிய அவலமாய் இன்று
கல்விகொள்கை சீரழிந்து விட்டதையா…
மருத்துவ படிப்பு வேட்கையா?
விழுங்கிவிட்டு வா…
“நீட்” எனும் நெருப்புத் துண்டை !
என போதிக்கிறார்களே…
வானுலகில் நான் இப்போது உங்களின்
அரவணைப்பில் தான்… எனினும்
வெந்து தணிந்த சாம்பல் அல்ல…
நான் போராட்ட களத்தில் என்றுமே
அனிதா எனும் நீறு பூத்த நெருப்பு!

 

 

 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்