எண்ணெய்யிலா தலையெனினும்
ஈர்ப்பு இருக்குது; நல்ல
இளமை சிரிக்குது; கண்கள்
பார்க்கத் துடிக்குது; முகமோ
பழக அழைக்குது; இதழ்கள்
பருக விரும்புது.
வறண்டுபோன முடியெனினும்
வனப்பைக் காட்டுது; புது
வசந்தம் கூட்டுது; எழில்
வடிவம் பேசுது; விழிகள்
காணக் கூசுது; மயக்கம்
கண்ணில் தெரியுது.
கறுப்புநிற முகமெனினும்
கவிதைப் பாடுது; இளமை
கருத்தில் ஆடுது; கவர்ச்சி
சிந்தைக் கலக்குது; அழகு
சிரசில் நிலைக்குது; கன்னம்
கவர்ந்து இழுக்குது.
அலங்காரம் இல்லையெனினும்
அழகு இருக்குது; இமையோ
அன்பைப் பறிக்குது; புருவம்
வேட்டை யாடுது; இதய
வீட்டைத் தகர்க்குது; பருவம்
வீணை மீட்டுது.