ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற
மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!!
பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான்
எவ்வளவு பாசம்.
கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே
ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா?
இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!!
தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள்
அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக.
தம்பியும் கல்வியை கையில் ஏந்தி
தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.
தாயின் கழுத்தில் மினுக்கும்கயிறுகூட
சங்கிலி துணையின்றி தவியாய் தவிக்கிறது.
தந்தையின் அடகு பத்திரங்கள் அடுக்கிய
இடத்திலேயே அழகாக காட்சித்தருகிறது.
இத்தனை சுமைகளையும் நிறைவேற்றிய
மகிழ்ச்சியில் என் வயதை அன்னார்ந்து
பார்த்தால் நான்கு, எட்டாக கூடிவிட்டது.
அழகுமங்கையை கரம்பிடித்து அருகில்
அமர்த்தினேன். மீண்டும் குடும்ப சுமைகள்
தள்ளிநின்று எட்டிப்பார்த்து எக்காலமிட்டது.
பணத்தைதேடி
எண்ணிப்பார்த்துவிட்டு விரும்பிப்பார்த்தேன்.
வாழ்ந்த நாளை வாழ்க்கை எண்ணிப்பார்த்து
ஏலனமாய் சிரித்துவிட்டு சென்றது. !!!!