பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…

பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…

இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…

அந்தத் திரவம்
உருவம்
ஆகிற்றோ …

முந்தானை
பிடித்திழுக்க
முயல் குட்டியா…

நானாகச்
சிரிக்கின்றேன்,
அசையாமல்
குதிக்கின்றேன்…

கண்ணாடியில்
முகம் பார்த்தது போய்,
முதன் முதலாய்
வயிறு…

என் பரம்பரையின்
இன்னொரு பருக்கையா
இது…

கட்டிலை
நகரச் சொல்லி,
ஒற்றைக் காலில்
தொட்டில்!

உன்னைச் சுமக்க,
உனக்காகச் சுரக்க,
மார் விம்மித் துடிக்கிறதே…

இந்த ஒளி
நிலவாக,
பத்துத் திங்கள்
பால் அருந்த வேண்டுமே…

கெஞ்சிக் கேட்கிறேன்.
நாளிகையே…
நகர மாட்டாயா?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்