இந்த வருட
ஒவியப் போட்டியில்
முதல் பரிசு கிடைத்திருக்கிறது
உன் பாதச்சுவடுக்கு.

உன்னை சுமந்து
செல்கிற சந்தோசத்தில்
தேய்ந்து போகிறது
செருப்பு.

ஒடுக்கபட்டவன் என்று
ஒதுக்கியது
சர்க்கார் மட்டுமல்ல
சமுதாயமும் தான்

குப்பைத்தொட்டிதானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை

பாவம்! அவர்கள்
பைத்தியகாரர்கள்
போயும் போயும்
ஒரு நாற்காலிக்காக
அடித்துக் கொள்கின்றனர்.

கொன்று குவித்தது
இராணுவ அரசு
அழுது குமுறியது
தமிழக அரசு
மனதாரச் சிரித்தது
மத்திய அரசு.

குடைக்குள் மழை
எங்கள் வீட்டு
குடிசைகளில்

மூடிமறைத்தாலும்
தெரிந்து விடுகிறது
உன் வெட்கம்

என்னிடம் சொல்லாலே
வந்து செல்கிறது
கனவு.

கோவிலில் சிறப்பு பூஜை
வெளியே கடவுளுக்குதொழுகை
உள்ளே காமத்தொழுகை

உன் விழி தந்த
வலி என் இதயத்தில்
காதலாக

தெருவிளக்கை
தேடிச் செல்கின்றன
இருள்

சாக்கடையிலும்
பூக்கின்றன
ரோஜாமலர்

மரங்களெல்லாம் இறந்துவிட்டன
விலங்குகள் மட்டும்
அனாதையாக……

உன் சிகையில்
சிக்கிக்கொண்டது
என் சிந்தை

உன் கையிலிருக்கும் மெழுகுத்திரியின்
வெளிச்சத்தை விட
ஒளியாய் இருக்கிறது
உன் முகம்

பெண்ணே!
தனியாய் இருக்கும்போது நீ
தயவுசெய்து பாட்டுமட்டும் பாடதே
குயில்தான் எங்கோ
கூவுகிறதோ என்று
வேடன் வந்துவிடுகிறான்.

என்றேனும் ஒரு நாள்
நான் பாடகனாகி விடுவேனென்ற
நம்பிக்கை எனக்கு இருக்கிறது
உன் கொலுசு சொல்லும்
மெட்டை என்னால்
பாடமுடியாதா என்ன!!!

சிலுவை சுமந்த
இயேசுவாய்
முதுகில்
புத்தக மூட்டையோடு
பள்ளி பிள்ளைகள்
என்ன பாவம் செய்தற்காக!!!

உன்னை நிலவென்று
சொல்கிறார்களே
நீ என்ன இரவில் மட்டும்
வந்துபோகும் குடுக்குடுப்பைகாரனா?
வானம் என்றல்லவா நினைத்தேன்

கல்லூரியில் பதில்
சொல்ல முடியாமல்
முழித்த போது தான்
பள்ளியில் அமைதியாய்
இருந்ததற்கு நான் பெற்ற
பாரட்டும் பைவ்ஸ்டாட் சாக்லெட்டும்

Categories: ஹைக்கூ

1 Comment

vinayaka moorthy · ஜூன் 26, 2017 at 7 h 26 min

aaha… nice one…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 9

வாசம் புதிது வண்ணம் புதிது மு.முருகேஷ் தமிழ்ப் பண்பாட்டு நடைமுறைகளில் பானம் அருந்துதல், தாம்பூலம் தரித்தல், ஒன்று சேர்ந்து உணவு உட்கொள்ளுதல் போன்றவை இருப்பதைப் போலவே, ஜப்பானும் தேநீர் விருந்தினைத் தனக்கான மரபாக்கிக் கொண்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் சீனாவில் தேநீர் அருந்தும் வழக்கம் தொடங்கி, ஹிய்யான் காலத்தில் ஜப்பானுக்கு அறிமுகமானது. ‘தேநீர்ப் பண்பாட்டின் தந்தை’ என அழைக்கப்பட்ட ஜப்பானிய ஜென் குரு இசாய் (கி.பி.1141-1215) தேயிலையை மூலிகையெனக் கருதி, அதன் மருத்துவக் குணங்களை நூலாக எழுதினார். ஜென் குருவான தாகுவான் (கி.பி.1573-1645), தேநீர்க் கோட்டை உருவாக்கினார். அதில் - ‘தேநீர் முதல் கோப்பை, தொண்டையையும் உதடுகளையும் நனைக்கும்; இரண்டாவது கோப்பை, தனிமையைக் கலைக்கும்; மூன்றாவது கோப்பை ஆழ்மனத்தைத் தொடும்’ என்று கவித்துவத்தோடு குறிப்பிட்டார்.