fb_img_1479227632649தேங்கிக் கிடக்கும்
தேன்தமிழ் அழகைத்
தேடிக் கண்டேன் அறிதாய்!
ஏங்கித் தவிக்கும்
எந்தன் நெஞ்சின்
ஏக்கம் தன்னை அறிவாய்!
தாங்கிக் காப்பேன்
தமிழே உன்னை
தடைகள் தாண்டி வருவாய்!
நீங்கா துன்னை
நினைவில் வைத்தேன்
நெருங்கி வந்தேத் தொடுவாய்!

ஆளை மயக்கும்
அணிச்சப் பூவை
அள்ளிச் சுவைக்கத் தேடும்!
சோலை வனமா?
சுந்தரத் தமிழா?
சொந்தம் வேண்டிப் பாடும்!
மாலை நேர
மையல் நிலவை
மனத்தில் வைத்தே வாடும்!
பாலை வனத்தின்
பசுமை காண
பாய்ந்தே மனமும் ஓடும்!

கன்னல் சுவையாம்
காதல் பார்வை
காலம் எல்லாம் வேண்டும்!
மின்னல் கீற்றாம்
மேனி தன்னை
மீட்டிக் களித்திட வேண்டும்!
வண்ணப் பூங்கா
வனப்பைக் காண
வாட்டம் தொலைந்து போகும்!
பொன்னே உன்னைப்
போற்றிக் காப்பேன்
புதையல் போல நாளும்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »