மழை மதம் பார்த்து விழுவதில்லை
இயற்கை மதம் பார்த்து தருவதில்லை
உழைப்பு மதம் பார்த்து வருவதில்லை
உதிரம் மதம் பார்த்து ஓடுவதில்லை
கருவறை மதம் பார்த்து சுமப்பதில்லை
நீ மட்டும் ஏன்?
சாதி, என்ற சொல்லில்
இரத்தத்தை அள்ளி குடிக்கிறாய்.
மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.