கம்பன் கவிநயம்… தொடர் – 3

”நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா”

கம்பன் கவிநயம்… தொடர் – 2

தம்பி இலக்குவனால் நிர்மாணிக்கப்பட்ட பர்ணசாலையின் வெளியில் இராமர் படுத்து ஓய்வில் இருக்கிறார். அந்த நேரத்தில் தனது கணவன் வித்யுத்சிகுவனைப் போரில் பறிகொடுத்து கைம்பெண்ணாகக் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் சூர்ப்பனகை அங்கே வருகிறாள். அரைகுறையாய் கண்களை மூடியும் திறந்தும் துயில் கொள்ளும் இராமனைக் காண்கிறாள். அவனது அழகில் மயங்கி தனது அரக்க உருவத்தை அழகிய உருவாக மாற்றிக் கொண்டு இராமனை நோக்கி நெருங்குகிறாள் … அவளது எழில் கொஞ்சும் மேனியழகு … அவளது நடை எப்படி இருந்ததது என்பதை கம்பன் நம் கண் முன்னே தனது கவிதை வரிகளால் அழகுபடக் கூறுகிறான் … பாருங்கள் …

” பல்லவ மனுங்கச் பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்சையென அன்னமென் மின்னும்
வஞ்சியென் நஞ்சமென வஞ்சமகள் வந்தாள் ”

அவள் ஒரு மயிலைப்போல் அலுங்காது அடியெடுத்து வைத்து மென்மையாய் வருகிறாள்.

[ மேலும்… ]

கம்பன் கவிநயம்… தொடர் – 1

‘கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்’ இது உயர்வு நவிற்சிக்காகக் சொல்லப்பட்டது என்று சிலர் கூறினாலும், அந்த அளவிற்கு கவி ஆற்றல் மிக்கவனாகக் கம்பன் விளங்கினான் என்பதே உண்மை. கவிச்சக்கரவர்த்தி என்று கம்பனைச் சொல்லுவது உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை. கம்பனின் கவித்திறத்திற்கும் உவமை நயத்திற்கும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சொற்களை எடுத்தாளும் திறத்திற்கும் பல்வேறு பாடல்களை உதாரணம் காட்டலாம். இதோ, பால காண்டம். எழுச்சிப் படலம். சிவதனுசை முறித்து இராமன் வெற்றி கொண்டான் Read more

கும்மிப் பாடலில் வெண்டளை வேண்டுமா?

இசைத்தமிழ் வடிவமான சிந்துப் பாடல்களில் ஒன்றான “கும்மிப் பாடல்களில்” வெண்டளை வரவேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். யாப்புத் தொடர்பான தற்கால நூல்களிலும் இந்தக் கருத்துள்ளது. ஆனால் “கும்மிப் பாட்டில் “வெண்டளை கட்டாயமில்லை என்பதே என் கருத்து. இக்கருத்து இரா.திருமுருகனாரின் வழியொட்டியது. பாடிப் பார்த்துணர்ந்த என் பயிற்சியின் வாயிலாகக் கண்டது. “இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம் நீங்கள் எல்லோரும் வாருங்கள் தோழர்களே!” இப்பாடல் பாவேந்தரின் புகழ்பெற்ற பாடல். இதில், இந்திக்குத் தமிழ்நாட்டில் / என Read more

கவி, கவிதை, கவிஞர் இவை தமிழா? வடமொழியா?

“கவி, கவிதை. கவிஞர்” இவை தமிழா? வடமொழியா? “கவி ” வடமொழி என்று அண்மையில் அன்பர் ஒருவரின் கருத்தைப் படிக்க நேர்தது. அருளியாரின் கூற்றையும், பாவாணரின் ஆய்வையும் சுட்டிக் காட்டினார். மேலும், சங்க இலக்கியங்களில் இச்சொல் இல்லை என்பதே வலிமையான சான்று எனக்குறிப்பிட்டார். இந்தச் சொல்லாய்வு தொடர்பான சில கருத்துகளை என் முடிபாகக் கூற முயல்கிறேன். ( பிறமொழிக் கலப்பில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்பதை முதலில் தெரிவித்துக் Read more