மரபுக் கவிதை
மன்றல் வாழ்த்து மடல்
திருமணச்செல்வங்கள்
நம்பி : ஏ.டி.வரதராசன்
நங்கை : கலைச்செல்வி
திருமண நன்னாள் : 09.04.2020
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –
திருமணச்செல்வங்கள்
நம்பி : ஏ.டி.வரதராசன்
நங்கை : கலைச்செல்வி
திருமண நன்னாள் : 09.04.2020
மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –
செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!
கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்!
விசித்திர அகவல்
ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.
குறள் வெண்பா
குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!
4 Comments
ஈழவேங்கை தம்பியின் தம்பி · ஜனவரி 1, 2021 at 3 h 39 min
சிறப்பு
Ramachandran karuppiah · ஜனவரி 9, 2021 at 3 h 52 min
(2020) இரண்டாயிரத்திருபதாம் கொடிய ஆண்டே போவாய் !
============================================================
இரண்டாயிரத் திருபதாம் கொடிய ஆண்டே போவாய் !
இம்மண்ணில் எண்ணிலா வன்கொடுமை செய்தாய் !
இதுபோல் இனிமேலும் வாராது அருள்வாய் !
=
புதியதோர் நல் ஆண்டே நலமுடனே வருவாய்
புவியெங்கும் அமைதியை நீ மலர்ந்திடவே செய்வாய்
மானுடம் தழைத்தோங்கும் அன்பு மனம் அருள்வாய் !
——————– இரண்டாயிரத்திருபதாம்
கொரோனா என்கின்ற கொடு நோயே போவாய்
பலலட்சம் உயிர் தின்ற தொடு நோயே ஒழிவாய் !
இம்மண்ணில் இனிமேலும் வாராது அழிவாய் !
=
கொரோனா நோய் மருந்தே விரைவாக வருவாய் !
நல்லவரை விரைவாக இறவாது காப்பாய் !
நோயில்லா நல்வாழ்வை குறையாது அருள்வாய் !
——————– இரண்டாயிரத்திருபதாம்
அமெரிக்கா சீனாவின் பகை நோயே போவாய்
இந்தியா சீனாவின் நட்பாகி மகிழ்வாய் !
ஆதிக்க வெறியழிந்து அன்பாகி அருள்வாய் !
=
உலகப் போர் மூளாது நாடுகளைத் தடுப்பாய் !
உலகம் இனியும் அழியாது மாசின்றி காப்பாய் !
ஏழ்மை எங்கும் இல்லாது கருணையொடு பார்ப்பாய் !
——————– இரண்டாயிரத்திருபதாம்
இந்தியாவில் …
மத்தியிலே நாடாள்வார் மதவெறியே போவாய் !
மனுநீதி அழிந்தொழிந்து சமதர்மம் வருவாய் !
அம்பேத்கார் சட்டங்கள் அழியாது காப்பாய் !
=
சாதியில்லா சமுதாயம் உருவாக்கித் தருவாய் !
பெண்களைத்தான் உயர்வாக போற்றும் குணம் அருள்வாய் !
யார் எவர்க்கும் அடிமையில்லா உயர் வாழ்வைத் தருவாய் !
——————– இரண்டாயிரத்திருபதாம்
மத்திய …
கூட்டாட்சி தத்துவங்கள் குலையாது காப்பாய் ! மாநில
சுய ஆட்சி சுதந்திரங்கள் அழியாது காப்பாய் !
அவரவரின் உரிமைகளை தடையின்றி காப்பாய் !
=
உழவர்களின் உரிமைகளை கெடுக்காது காப்பாய்
குழந்தைகளின் கல்விகளை ஒடுக்காது வளர்ப்பாய் !
பழமைவாத கொள்கைகளை கூண்டோடு அழிப்பாய் !
——————– இரண்டாயிரத்திருபதாம்
மாநிலத்தில் மொழி இனத்தை உயிராக காப்பாய் !
அவரவரின் பண்பாட்டில் இனிது வாழ வைப்பாய் !
இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தில் நிற்பாய்!
=
ஒரு இனத்தார் உயர்ந்து வாழ ஓர வஞ்சனை செய்யாய் !
ஒரு மொழியை வாழவைக்க பிறமொழியை அழியாய் !
இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க நினையாய் !
——————– இரண்டாயிரத்திருபதாம்
===========================================================
Ramachandran karuppiah · ஜனவரி 9, 2021 at 3 h 54 min
அன்பு அமைதி கருணையோடு 2021 புதிய ஆண்டே வருவாய்
புது வருடம் புதிய தொரு வாழ்வளிக்கட்டும்
மனித நேய பண்புகளை மனம் விதைக்கட்டும்
சாதி மத வெறியெல்லாம் அழிந்தொழியட்டும்
அன்பு கருணை பாசம் நேசம் பொங்கி வழியட்டும்
=
இந்தியாவின் பிரதமர்க்கு அன்பு சுரக்கட்டும்
உலக தலைவர் மனதில் மனித நேயம் மலரட்டும்
வாழும் பூமி பசுமை போர்த்தி வளமை காணட்டும்
வள்ளுவனின் வாழ்வியலின் வழியில் செல்லட்டும்
=
வருங்கால சந்ததிகள் கோள்கள் கடக்கட்டும்
அண்டம் விட்டு அண்டம் கடந்து வாழ்வை தொடங்கட்டும்.
பெருவெடிப்பு கொள்கையினை நன்கு ஆயட்டும்
கருந்துளையின் உள் சென்று உண்மை கொணரட்டும்
=
பிரபஞ்ச சக்தி எங்கு என்று தேடி காணட்டும்
அந்த அன்பு நிறைந்த சக்திக்கு நம் நன்றி கூறட்டும்- சுயநல
மனிதரை ஏன் படைத்தாய் என்று வினவட்டும்
அன்போடு அனைவருமே அகமகிழ்ந்து வாழட்டும்
========================================================
கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் · ஜனவரி 30, 2021 at 17 h 52 min
தமிழின் சிறப்பைத்
தரணியும் அறிந்திட
அமிழ்தம் இதுவென
அகிலம் உணர்ந்திட
கமழும் தமிழைக்
கவியால் தொடுத்தநீர்
சிமிழாய் வாழ்க
செகமே போற்ற !