4 Comments

ஈழவேங்கை தம்பியின் தம்பி · ஜனவரி 1, 2021 at 3 h 39 min

சிறப்பு

Ramachandran karuppiah · ஜனவரி 9, 2021 at 3 h 52 min

(2020) இரண்டாயிரத்திருபதாம் கொடிய ஆண்டே போவாய் !

============================================================

இரண்டாயிரத் திருபதாம் கொடிய ஆண்டே போவாய் !

இம்மண்ணில் எண்ணிலா வன்கொடுமை செய்தாய் !

இதுபோல் இனிமேலும் வாராது அருள்வாய் !

=

புதியதோர் நல் ஆண்டே நலமுடனே வருவாய்

புவியெங்கும் அமைதியை நீ மலர்ந்திடவே செய்வாய்

மானுடம் தழைத்தோங்கும் அன்பு மனம் அருள்வாய் !

——————– இரண்டாயிரத்திருபதாம்

கொரோனா என்கின்ற கொடு நோயே போவாய்

பலலட்சம் உயிர் தின்ற தொடு நோயே ஒழிவாய் !

இம்மண்ணில் இனிமேலும் வாராது அழிவாய் !

=

கொரோனா நோய் மருந்தே விரைவாக வருவாய் !

நல்லவரை விரைவாக இறவாது காப்பாய் !

நோயில்லா நல்வாழ்வை குறையாது அருள்வாய் !

——————– இரண்டாயிரத்திருபதாம்

அமெரிக்கா சீனாவின் பகை நோயே போவாய்

இந்தியா சீனாவின் நட்பாகி மகிழ்வாய் !

ஆதிக்க வெறியழிந்து அன்பாகி அருள்வாய் !

=

உலகப் போர் மூளாது நாடுகளைத் தடுப்பாய் !

உலகம் இனியும் அழியாது மாசின்றி காப்பாய் !

ஏழ்மை எங்கும் இல்லாது கருணையொடு பார்ப்பாய் !

——————– இரண்டாயிரத்திருபதாம்

இந்தியாவில் …

மத்தியிலே நாடாள்வார் மதவெறியே போவாய் !

மனுநீதி அழிந்தொழிந்து சமதர்மம் வருவாய் !

அம்பேத்கார் சட்டங்கள் அழியாது காப்பாய் !

=

சாதியில்லா சமுதாயம் உருவாக்கித் தருவாய் !

பெண்களைத்தான் உயர்வாக போற்றும் குணம் அருள்வாய் !

யார் எவர்க்கும் அடிமையில்லா உயர் வாழ்வைத் தருவாய் !

——————– இரண்டாயிரத்திருபதாம்

மத்திய …

கூட்டாட்சி தத்துவங்கள் குலையாது காப்பாய் ! மாநில

சுய ஆட்சி சுதந்திரங்கள் அழியாது காப்பாய் !

அவரவரின் உரிமைகளை தடையின்றி காப்பாய் !

=

உழவர்களின் உரிமைகளை கெடுக்காது காப்பாய்

குழந்தைகளின் கல்விகளை ஒடுக்காது வளர்ப்பாய் !

பழமைவாத கொள்கைகளை கூண்டோடு அழிப்பாய் !

——————– இரண்டாயிரத்திருபதாம்

மாநிலத்தில் மொழி இனத்தை உயிராக காப்பாய் !

அவரவரின் பண்பாட்டில் இனிது வாழ வைப்பாய் !

இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தில் நிற்பாய்!

=

ஒரு இனத்தார் உயர்ந்து வாழ ஓர வஞ்சனை செய்யாய் !

ஒரு மொழியை வாழவைக்க பிறமொழியை அழியாய் !

இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க நினையாய் !

——————– இரண்டாயிரத்திருபதாம்

===========================================================

Ramachandran karuppiah · ஜனவரி 9, 2021 at 3 h 54 min

அன்பு அமைதி கருணையோடு 2021 புதிய ஆண்டே வருவாய்

புது வருடம் புதிய தொரு வாழ்வளிக்கட்டும்

மனித நேய பண்புகளை மனம் விதைக்கட்டும்

சாதி மத வெறியெல்லாம் அழிந்தொழியட்டும்

அன்பு கருணை பாசம் நேசம் பொங்கி வழியட்டும்

=

இந்தியாவின் பிரதமர்க்கு அன்பு சுரக்கட்டும்

உலக தலைவர் மனதில் மனித நேயம் மலரட்டும்

வாழும் பூமி பசுமை போர்த்தி வளமை காணட்டும்

வள்ளுவனின் வாழ்வியலின் வழியில் செல்லட்டும்

=

வருங்கால சந்ததிகள் கோள்கள் கடக்கட்டும்

அண்டம் விட்டு அண்டம் கடந்து வாழ்வை தொடங்கட்டும்.

பெருவெடிப்பு கொள்கையினை நன்கு ஆயட்டும்

கருந்துளையின் உள் சென்று உண்மை கொணரட்டும்

=

பிரபஞ்ச சக்தி எங்கு என்று தேடி காணட்டும்

அந்த அன்பு நிறைந்த சக்திக்கு நம் நன்றி கூறட்டும்- சுயநல

மனிதரை ஏன் படைத்தாய் என்று வினவட்டும்

அன்போடு அனைவருமே அகமகிழ்ந்து வாழட்டும்

========================================================

கவிஞர் அ முத்துசாமி தாரமங்கலம் · ஜனவரி 30, 2021 at 17 h 52 min

தமிழின் சிறப்பைத்
தரணியும் அறிந்திட
அமிழ்தம் இதுவென
அகிலம் உணர்ந்திட
கமழும் தமிழைக்
கவியால் தொடுத்தநீர்
சிமிழாய் வாழ்க
செகமே போற்ற !

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

மன்றல் வாழ்த்து மடல்

திருமணச்செல்வங்கள்

நம்பி : ஏ.டி.வரதராசன் 
நங்கை : கலைச்செல்வி

திருமண நன்னாள் : 09.04.2020

மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறென்ற –

 » Read more about: மன்றல் வாழ்த்து மடல்  »

மரபுக் கவிதை

வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!

செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!

கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்!

 » Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.

குறள் வெண்பா

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

 » Read more about: தமிழமின் வாழ்க தழைத்து!  »