பெண்:
ஒத்தையடி பாதையிலே..
நான் போறேன் ஆசைமச்சான்
ஆற்றங்கரை ஓரத்திலே..
அத்திமரம் நிழலாண்ட காத்திருக்கேன்
வா.. மச்சான்..
அன்றொரு நாள் அம்மன் கோயில்.
திருவிழாவில் நீ பார்த்த பார்வையிலே
சூளாகி போனேன் நான்..
அது பிறந்து உன்னை ‘அப்பா’ ன்னு
சொல்லும் முன்னே..
என் கழுத்தில் தாலி கட்டு..
ஊர்சனம் எல்லாமே மொய்த்து காத்திருக்கு..
நம்மை வாழ்த்தி அது போக
நாளெல்லாம் பேசியிடுச்சு..
ஆண்:
என் ஆசை நீதான் புள்ளே..
கரும்பு மீது எறும்பாக ..
நான் இருக்க ஆசைபுள்ளே
ஐப்பசியில் நாள் குறிப்போம்..
மணவறையில் அமர்ந்திருப்போம்
கண் கலங்க வேண்டாம் புள்ளே ..
அணைத்தும் மகிழ்ந்திருப்போம்.