எங்கள் கவியரசர் இயற்றித்  தந்தபொருள்
    ஏந்தும் இசையளிக்கும் இன்பம்!
பொங்கும் மனத்துயரைப்  பொசுக்கி வாழ்வளிக்கும்
    போதும் இனியெதற்குத் துன்பம் !

இன்னல் வரும்பொழுதும்  இனிய கானமழை
    என்றும் மனச்சுமையைப் போக்கும் !
அன்னை மொழியழகும் அரும்பும் அசையழகும் 
    அமுதச் சுவையழகைத் தேக்கும் !

பாடும் குயிலுடனே பருவ மங்கையவள்
    ஆடிக் கழித்திடுவாள் தினமே !
நாடி வரும்துயரும்  நகரும் இன்னிசையால்
    நல்ல மருந்திதுதான் மனமே !

காதல் உணர்வுகளைக் கலந்து வந்தஇசை
    ஆளும் எமதுயிரை  இதமாய் !
பாழும் மனத்திரையில் படியும் இன்னிசைகள்
    பாசம் வளர்த்திடுமே  பதமாய் !

ஓலைக் குடிசையிலே  ஒடுங்கி வாழ்கையிலும்
    ஊக்கம் அளித்த….தமிழ்ப்  பாடல் !
வேலை தரும்சுமையை  விரட்டி அடித்திடுமே 
    விந்தை விழைந்த.. தமிழ்க் கூடல் !

காடு மணப்பதுபோல் கன்னல் கவியனைதும் 
    காந்தம் எனஇழுத்து ஓடும் !
பாடும் பொருள்புதிதாய் படரும் போதினிலே
    பாரில் இல்லையொரு ஈடும் !

சுற்றம் இருந்துமொரு சுகமும் இல்லையெனச் 
    சுற்றி அலைந்தகதை போதும் !
வற்றும் நினைவலையில் வசந்த கானமழை
    வந்து உதிக்கஇன்பம் மோதும் !

பற்று அறுந்துமனம் பதறும் வேளையிலும் 
    பாடி வைத்தகவி கோடி !
அற்றைக் கனவுபல அகத்தில் தோன்றநிதம்
    ஆன்மா மகிழ்ந்திருக்கும்  பாடி ! 


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »

மரபுக் கவிதை

அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற அரசியல் சகாப்தமாக வாழ்ந்து சாதித்து மறைந்த ஒரு மாபெரும் மேதை பேரறிஞர் அண்ணா அவர்கள் என்றால் அது கிஞ்சித்தும் மிகையாகாது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து கல்வியாலும் உழைப்பாலும் உயர்ந்து தன் நாவன்மையால் தமிழகமக்களைக் கட்டிப்போட்டு,

 » Read more about: அறிஞர் அண்ணா (விருத்தமலர்கள்)  »