thadaagamஅல்லி மலர் பூத்திருக்கு
அங்கமெல்லாம் வேர்த்திருக்கு
மன்னவனே உன் நினைவில்
மனசெல்லாம் காத்திருக்கு…

உன் நினைவில் நான் வாழ
உள்ளமெல்லாம் இனிமையடி
என் நினைவில் குடியிருக்கும்
கன்னி உந்தன் இதயமடி…

பூப்போல உன் மனசு
பூத்திருக்கு எனக்குள்ளே
வண்டாக நீ வந்து
வாலிபத்தை தூண்டிவிடு…

அழகான தூண்டிலடி
அந்த இரு கண்களுமே
அப்படியே இழுக்குதடி
அள்ளிக்கொள்ளும் ஆசையிலே…

தண்ணிக் குடமெடுத்து
தனியாக வந்திருக்கேன்
தாகம் உனக்கிருந்தால்
தாவி வந்து என்னைத்தொடு…

மோகத் தீப்பறந்து
மல்லிகையை தீண்டிடவே
மாலை வருவதற்குள்
மானே நான் வந்திடுவேன்…


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.