simara_ali
மடந்தைகள் அழகென்று
மாண்புமிகு நிலைதன்னை
வேடிக்கையாக்கி பொய் வேஷங்கள் போடும்
பொய்யான உலகிது!

மாண்புகள் கேட்டிங்கு
ஏங்கிடும்
மாதர்கள் மாதவம் செய்தின்னும்
வரங்கள் கைவந்து சேரவில்லை!

ஏமாற்று நாளாக
மாதர்கள் தினம்தன்னில்
வாழ்த்துக்கள் மெய்காண
மங்கையை கிள்ளிடும்
நகங்களை நறுக்கவேண்டும்!

விதையாத மண்மீது
விதைந்திடும் விதை தூவி
பயன்தேடும் மூடர்கள்
விழிகளின் மீதிங்கு
கனவினை ஏந்திடும்
மாதர்கள் துயர் நீக்கின்
நாளை
விளைந்திடும் மகளிரின் மாண்புகள்!


1 Comment

N.Lakshmipraba · மார்ச் 10, 2016 at 14 h 47 min

அருமையான கவிதை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.