ஆசிர்வதிக்கப்பட்ட பூமி
அவதாரபுருசர்கள்
அவதரித்த
புண்ணிய பூமி…..

இங்கிருந்துதான்
ஓடுகிறது
வேதங்களை படைத்த
தேவதூதர்களின் நதிக்கரைகளில்
இரத்தக்காட்டாறு..!

பழமைக்கும்,.
புதுமைக்கும் மத்தில்
பலியாடுகள்
இந்த குழந்தைகள்.,.

சிலுவை சுமக்க
கற்றுக்கொடுத்தவர்களுக்கும்
காட்டிக்கொடுத்தவர்களுக்கும்
மத்தியில்
பந்தாடப்படுகிறது
பலஸ்தீனம்..!

வல்லாதிக்க கரங்களில்
இரு குழந்தைகள்
ஒன்று
ஆயதக் கரங்களில் பிறந்த
கள்ளக்குழந்தை..

மற்றொன்று
சவக்குழியில்….!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.