ஆசிர்வதிக்கப்பட்ட பூமி
அவதாரபுருசர்கள்
அவதரித்த
புண்ணிய பூமி…..
இங்கிருந்துதான்
ஓடுகிறது
வேதங்களை படைத்த
தேவதூதர்களின் நதிக்கரைகளில்
இரத்தக்காட்டாறு..!
பழமைக்கும்,.
புதுமைக்கும் மத்தில்
பலியாடுகள்
இந்த குழந்தைகள்.,.
சிலுவை சுமக்க
கற்றுக்கொடுத்தவர்களுக்கும்
காட்டிக்கொடுத்தவர்களுக்கும்
மத்தியில்
பந்தாடப்படுகிறது
பலஸ்தீனம்..!
வல்லாதிக்க கரங்களில்
இரு குழந்தைகள்
ஒன்று
ஆயதக் கரங்களில் பிறந்த
கள்ளக்குழந்தை..
மற்றொன்று
சவக்குழியில்….!