நேசமுடன் ஒரு வார்த்தை
நேற்றே நீ சொல்லியிருந்தால்
வஞ்சிக் கொடியுன்னை
வாரியணைத்திருப்பேன்..
பாசமுடன் ஒரு பார்வை
பார்த்துச் சொல்லியிருந்தால்
பைங்கிளியே உன்னை
பூப்போல தாங்கியிருப்பேன்..
அத்தான் என்று சொல்லி
ஆசையாய் அழைத்திருந்தால்
கண்ணாக நானிருந்து
காலமெல்லாம் காத்திருப்பேன்..
மாமா என்று சொல்லி
மனதார அழைத்திருந்தால்
மார்போடு சேர்த்தணைச்சி
முத்தமழை பொழிந்திருப்பேன்..
அன்பே என்று சொல்லி
அழகாக அழைத்தாயே
மான்விழி உன்னையென்றும்
மனசுக்குள் சுமந்திருப்பேன்..