திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 90

பாடல் – 90 ஈதற்குச் செய்க பொருளை அறநெறி சேர்தற்குச் செய்க பெருநூலை – யாதும் அருள் புரிந்து சொல்லுக சொல்லைஇம் மூன்றும் இருளுலகம் சேராத ஆறு. (இ-ள்.) பொருளை – செல்வத்தை, ஈதற்கு – பிறருக்குக் கொடுக்கும் பொருட்டு, செய்க – தேடக்கடவன்; அறம்நெறி – அறத்தின் வழியில், சேர்தற்கு – சேரும் பொருட்டு, பெரும் நூலைச் செய்க – பெருமையாகிய நூற்பொருளைக் கற்கக் கடவன்; யாதும் சொல்லை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 89

பாடல் – 89 அருளினை நெஞ்சத் தடைகொடா தானும் பொருளினைத் துவ்வான் புதைத்துவைப் பானும் இறந்தின்னா சொல்லகிற் பானுமிம் மூவர் பிறந்தும் பிறந்திலா தார். (இ-ள்.) அருளினை – அருளை, நெஞ்சத்து – மனத்திடத்து, அடை கொடா தானும் – நிறைத்து வையாதவனும்; பொருளினை – செல்வத்தை, துவ்வான் – (தானும்) நுகராது, புதைத்து – (பிறர்க்குங் கொடாமல்) பூமியில் மறைத்து, வைப்பானும் – வைக்கின்றவனும், இறந்து – தன்னிலை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 88

பாடல் – 88 பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும் தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும் பிணைசெல்வ மாண்பின் றியங்கலிவை மூன்றும் புணையின் நிலைகலக்கும் ஆறு. (இ-ள்.) பிணி – நோயானது, தன்னை – , தின்னுங்கால் – வருத்தும்போது, தான் வருந்தும் ஆறும் – (ஒருவன்) தான் (அதற்கு) வருத்தப்படும் வகையும்; பெருங்கூற்று – பெரிய எமன் உயிர் உண்ணும் ஆறும் – உயிரைக் கொண்டுபோக வருத்தும் வகையும்; பிணை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 87

பாடல் – 87 கொல்வது தானஞ்சான் வேண்டலும் கல்விக் ககன்ற இனம் புகுவானும் இருந்து விழுநிதி குன்றுவிப் பானுமிம் – மூவர் முழுமக்க ளாகற்பா லார். (இ-ள்.) கொல்வது – (ஒருயிரைக்) கொல்வதற்கு, தான் அஞ்சான் – தான் அஞ்சாதவனாகி, வேண்டலும் – அதனைச் செய்ய விரும்புதலும்; கல்விக்கு -; அகன்ற – நீக்கமாகிய, இனம் – கூட்டத்திலே, புகுவானும் – நுழைகின்றவனும்; இருந்து – (ஒரு முயற்சியும்) செய்யாதவனா Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 86

பாடல் – 86 அற்புப் பெருந்தளை யாப்பு நெகிழ்ந்தொழிதல் கற்புப் பெரும்புணை காதலின் கைவிடுதல் நட்பின் நயநீர்மை நீங்கல் இவைமூன்றும் குற்றந் தரூஉம் பகை. (இ-ள்.) அன்பு பெருந்தளை – அன்பினாலாகிய பெருந்தளையினது, யாப்பு – கட்டு, நெகிழ்ந்து ஒழிதல் – தன்னை விட்டுத் தளர்ந்து நீங்குதலும்; கற்பு – கல்வியாகிய, பெரும்புணை – பெரிய தெப்பத்தை, காதலின் – பொருள் முதலியவற்றின் விருப்பினால், கை விடுதல் – முற்றும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 85

பாடல் – 85 எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக் கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும் ஒள்ளிய ஒற்றாள் குணம். (இ-ள்.) எள்ளப்படும் – (தன் செய்கை பகைவரால்) நன்கு மதிக்கப்படாத, மரபிற்று ஆகலும் – முறையை உடையதாதலும்; உள் பொருளை – (அப் பகைவரிடத்து) நடந்துள்ள காரியத்தை, கேட்டு மறவாத – கேட்டுப் பின் மறவாத, கூர்மையும் – கூரறிவுடைமையும்; உள் பொருள் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 84

பாடல் – 84 வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத் தாய்முலை யுண்ணாக் குழவியும் சேயமரபில் கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர் நல்குரவு சேரப்பட் டார். (இ-ள்.) வாய் – நீர் வரும்வழி, நன்கு அமையாக் குளனும் – நன்றாக அமைந்திராத குளமும்; வயிறு ஆர – தன் வயிறு நிரம்பும்படி, தாய்முலை உண்ணா – தாயின் முலைப்பாலை உண்ணாத, குழவியும் – குழந்தையும்; சேய் மரபில் – உயர்ந்த முறைமையில், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 83

பாடல் – 83 உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும் நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும் செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும் செப்ப நெறிதூரா வாறு. (இ-ள்.) உப்பின் – உப்பினது, பெருங்குப்பை – பெரிய குவியல், நீர் படியின் – தன்னில் நீர் படிந்தால், இல் ஆகும் – இல்லாமற் போகும்; நட்பின் கொழுமுளை – நட்பினது செழித்த முளையானது, பொய் வழங்கின் – பொய்யாகிய நெருப்பைப் பெய்தால், இல் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 82

பாடல் – 82 சான்றாருள் சான்றான் எனப்படுதல் எஞ்ஞான்றும் தோய்ந்தாருள் தோய்ந்தான் எனப்படுதல் – பாய்ந்தெழுந்து கொள்ளாருட் கொள்ளாத கூறாமை இம்மூன்றும் நல்லான் வழங்கும் நெறி. (இ-ள்.) சான்றாருள் – (நற்குணங்களால்) நிறைந்தவரிடத்தில் சான்றான் எனப்படுதல் – நற்குணங்களால் நிறைந்தவன் என்று கருதப்பட நடத்தலும்; எஞ்ஞான்றும் – செல்வம் உற்ற காலத்தும் அற்ற காலத்தும், தோய்ந்தாருள் – (ஒருதன்மையராய்) நட்புக் கொண்டு கலந்தவரிடத்து, தோய்ந்தான் – நட்புக்கொண்டு கலந்தவன், எனப்படுதல் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 81

பாடல் – 81 தோள்வழங்கி வாழும் துறைபோற் கணிகையும் நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும் வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர் ஆசைக் கடலுளாழ் வார். (இ-ள்.) துறைபோல் – (பலருக்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்கும்) துறையினைப் போல, தோள் வழங்கி – (பலருக்கும் பொதுவாய் நின்று) தனது தோளைக் கொடுத்து, வாழும் – வாழ்கின்ற, கணிகையும் – வேசையும்; நாள் – ஒவ்வொரு நாளும், கழகம் பார்க்கும் Read more