அழகான கண்ணிமைகளில் …
அழுகைப்பூ பூத்திருக்கு !…
விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் …
விண்ணிலே பூத்திருக்கு !…
தனித்த வெண்ணிலவாய் …
வெள்ளிகளின் மத்தியிலே ..
உண்ணா நோன்பிருந்து ..நீ ,
உடல் வருத்தி லாபமென்ன ?…
சத்தியமாய் பாதைமாறா …
உத்தமியாய் வாழ்ந்திருந்தாய் !…
சங்கோஜம் நிறைந்தவளாய் …
செல்வியாய் வளர்ந்திருந்தாய் !..
எதற்குமே குறைவில்லை …
எண்ணி மனம் பூரித்திருந்தாய் !..
இடைக்கால தடைபோல ..
இடிமுழக்கம் கேட்டதம்மா !…
மின்னலும் வெட்டி ,வெட்டி ..
மழை பெய்து ஓய்ந்ததம்மா !…
எல்லார்க்கும் எல்லாமும் ..
எப்போதும் நிறைவதில்லை !..
நிறைவான எல்லாமும் ..
நின்றொன்னும் நிலைத்ததில்லை !..
நீ மட்டும் விதிவிலக்கா ?..
நிறைவடைந்து வாழ்ந்து செல்ல ?…
கண்மணியே கலங்காதே !..
உன்தாயாய் நானிருப்பேன் !…
என் உயிர் மூச்சு உள்ளவரை !..
என் உயிர் பிரிந்து போகும்வரை !..
எனக்கே அம்மாவாய் நீயிருந்தாய் ..பழைய கதை !
உனக்கும் அம்மாவாய் நானிருப்பேன் ..புதிய கதை !..


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...