முஹம்மட் றாபி

தையும் மார்கழியும்
மாறி மாறி,
வயதுகள் நெய்யும்.

தாயும் ‘ஆ’ வும்
பருகத் தர,
காயும் கனியும்.

கனியக் கனிய
இளமைப் பழங்களை,
காலம் கொய்யும்.

முன் பாதியில்
நிலா காயும்,
பின்னரது தேயும்.

கவலைக் காயம்
காயும்,
மீண்டும் கனிந்து காயும்.

முதுமைத் தீயும்
பரவும்,
அது மெய்யை மேயும்.

சுறுட்டப் படா பாயும்
சொல் கேளா நோயும் கண்டு,
உயிர் மாயும்.

தோலோடு
சொத்தும் சுருங்கும்,
ஆயிரம் ஏக்கர் ஆறடியாகும்.

சாயும் காலம்
வாயும் வயிறும் வேறென்று,
உறவுச் சாயம் கரையும்.

 


1 Comment

? · ஜூலை 7, 2017 at 2 h 12 min

வாழ்வின் படிமங்களையே படிப்படியாக செதுக்கியிருக்கிறார் கவிஞர்.
கொய்த சொற்களும் கோர்த்த விதமும் அழகு.
தந்த கவிக்கும் தமிழ் நெஞ்சிற்கும் வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்