சிலநினைவுகள் எழும்போது
குரோதம் கொள்கிறேன்,
இன்னும்சில நினைவுகளோ
என்கண்களை நனைக்கின்றன!

மறக்க நினைக்கும் நினைவுகள்
என்னைத் தினமும்
நினைக்கச் சொல்கின்றன!

நினைக்க வேண்டியவைகள்
அடிக்கடி தொலைகின்றன!

கரைதொட்டுச் செல்லும்
அலைகள்போல்
என் மனம்தொட்டுச் செல்லும்
சிலநினைவுகள்,

விடைகள் இல்லாத
விடுகதைகளாக சில நினைவுகள்,

முடிவில்லாத
தொடர்கதைகளாக பலநினைவுகள்,

சில நேரங்களில்
சிற்றாறுகள்போல்,
பல நேரங்களில்
பாழ்கிணறுகள்போல்,
சுழலும் ஆழிப்
பெருங்கடல்களாகவும்
அலைக்கழிக்கப்பட்டுக்
கொண்டிருக்கிறேன்!

இருந்தாலும் பயணிப்பேன்,
நம்பிக்கையென்னும் துடுப்புகளால்
நங்கூரம் கொண்டுள்ளேன் நெஞ்சில்!

நீந்திக்கடப்பேன்
நினைவுகளைத் தோற்கடிப்பேன்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்