அக்கினி குஞ்சின் அடையாளப்பொறி ..!


சிவந்த வானமாய் அவன் கண்கள் ..!
சினேகிதத்தில் அவன் மடி தவலும் குயில்கள் ..!
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தை அழிக்க சவால் விட்டவன் ..!
நிலம் கேட்டு கண்முன்னே காணி
பராசக்தியிடம் கோபம் தொடுத்தவன் ..!
காதல் கசிய விரல்களை வீணையாக்கியவன் ..!
எதிர்த்தடித்து ஏற்றறத்தாழ்வுகளை
இம்மண்ணில் சமம் நிலவ கலகம் பூண்டவன் ..!
காண்போர் கனவு மெய்பட வேண்டுமென குரல் எழுப்பியவன் ..!
தமிழுக்கு தலையணையாய் வாழ மொத்தத்தில் பாஞ்சாலி சபதத்தையே சாட்சியாய் நமக்கு தந்துவிட்டு மகா கவிஞனாக மனதின் அகலாமல் ஆத்மாவோடு வாழ்பவன் இந்த எட்டையபுரத்து
முண்டாசுஅக்கினி கவிக்காரன் ..!
எங்கள் நெஞ்சில் வாழ்கிறாய் பெரும் அக்கினிகுஞ்சாய் ..!

வாழும் உன் புகழ் இப்பிரபஞ்சம் இருக்கும்வரை …


1 Comment

umapathy · டிசம்பர் 12, 2016 at 18 h 23 min

மகிழ்ச்சி மனம் நெகிழ்ச்சி நன்றி சார்! மிக்க நன்றி!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்