மனிதனை நினைத்தால்
எல்லா உயிர்களும்
மலைத்து நிற்கும்!

பிறர் குறைகளைச்
சுட்டிக் காட்டுவதில்
வேறு எந்த உயிர்களும்
அவனை வென்றதாக
வரலாறு கிடையாது
என்பதால்!

அவன்
தன் பிழைகளை
என்றுமே
ஏற்றுக் கொண்டதில்லை!

இவன் கோபங்கொள்வான்
ஆனால்
ஏண்டா பாம்பு போல
சீறுகிறாய் என்று மற்றவரைப் பார்த்துச்
சொல்வான்!

அடிக்கடி
குணம் மாறுவான்
ஆனால் ஏன்தான் இந்தக்
குரங்கு சேட்டையோ என்பான்!

இவன் ஏமாற்றிப் பிழைப்பான்
தந்திரங்கள் செய்வான்!
ஆனால் அட குள்ளநரியே
என்று பிறரை அழைப்பான்!

தன் தவறுகளை
என்றுமே
ஒப்புக்கொள்ள மறுக்கும்
மனிதன்
இறைவனின் படைப்பில்
தனித்துவம் மிக்கவனாமே?
இந்த மனிதனா
இறைவனின் சாயலில்
படைக்கப்பட்டவன்?
மனிதனை
எந்த உயிர்களாலும்
புரிந்துகொள்ளவே
முடிவதில்லை!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...