மனிதனை நினைத்தால்
எல்லா உயிர்களும்
மலைத்து நிற்கும்!

பிறர் குறைகளைச்
சுட்டிக் காட்டுவதில்
வேறு எந்த உயிர்களும்
அவனை வென்றதாக
வரலாறு கிடையாது
என்பதால்!

அவன்
தன் பிழைகளை
என்றுமே
ஏற்றுக் கொண்டதில்லை!

இவன் கோபங்கொள்வான்
ஆனால்
ஏண்டா பாம்பு போல
சீறுகிறாய் என்று மற்றவரைப் பார்த்துச்
சொல்வான்!

அடிக்கடி
குணம் மாறுவான்
ஆனால் ஏன்தான் இந்தக்
குரங்கு சேட்டையோ என்பான்!

இவன் ஏமாற்றிப் பிழைப்பான்
தந்திரங்கள் செய்வான்!
ஆனால் அட குள்ளநரியே
என்று பிறரை அழைப்பான்!

தன் தவறுகளை
என்றுமே
ஒப்புக்கொள்ள மறுக்கும்
மனிதன்
இறைவனின் படைப்பில்
தனித்துவம் மிக்கவனாமே?
இந்த மனிதனா
இறைவனின் சாயலில்
படைக்கப்பட்டவன்?
மனிதனை
எந்த உயிர்களாலும்
புரிந்துகொள்ளவே
முடிவதில்லை!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.