ஹைக்கூ ஓர் அறிமுகம் – 10

தொடர் 10 வார்த்தைகள் என்றும் வலிமையானவை..தமிழில் ஒரு சொலவடை உண்டு. ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லுமென்று. கவிதைகளிலும் வார்த்தைகள் முக்கியப் பங்கினை ஆற்றுகின்றன. வார்த்தைகளே கவிதைகளை சிறப்படையச் செய்கின்றன. அத்தகைய வார்த்தைகளை நாம் கவிதைகளில் கையாளும் போது கவனமாக கையாளுதல் அவசியம். ஒருமை, பன்மை வார்த்தைகளைக் கையாளும் போதும் வார்த்தைச் சொற்றொடர்களை அதற்கு தகுந்தாற்போலக் கையாள்வது முக்கியம். மாடு ஓடுகிறது…என்பது சரி மாடுகள் ஓடுகிறது… என்பது தவறு. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 09

தொடர் 09 ஹைக்கூவில் வார்த்தைக் கட்டுப்பாடு என்பது எவ்வளவு முக்கியமோ, அந்தளவு அந்த வார்த்தைகளை கையாள்வதும் முக்கியத்துவம்பெறுகிறது. வார்த்தைச் சிக்கனமே ஹைக்கூவில் முக்கியமானதாகும். எந்த ஒரு வார்த்தையையும் அனாவசியமாக ஹைக்கூவில் பிரயோகிக்கத் தேவையில்லை. ஒரு வார்த்தையை நீக்கினாலும் அக்கவிதையின் பொருளானது மாறாமல் இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட வார்த்தையை நீங்கள் தாராளமாக நீக்கி விடலாம். இரவில் பெய்யும் மழை விடியும் வரை தொடர்கிறது மின்சாரத் தடை. இந்த ஹைக்கூவில் ”பெய்யும்” என்ற Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 08

தொடர் 08 கவிதையில் கற்பனை முற்றிலும் இருக்கக்கூடாது. உவமையோ.. உருவகப்படுத்துவதோ.. ம்ஹூம் அதுவும் ஆகாது. வார்த்தைகளிலும் சிக்கனம் தேவை.  அடிகளோ மூன்று அடி தான் இவ்வளவு கட்டுப்பாடு தந்து கவிதை எழுதுங்கள் எனில் மலைப்பாய்தான் இருக்கும். ஆனால் ஹைக்கூ கவிதைகளின் சிறப்பியல்புகளே இது தான். இதில் ஹைக்கூ கவிதைக்கான வடிவமைப்பு மூன்றடி என பார்த்தோம். ஆனால் ஜப்பானில் ஹைக்கூ மூன்றடியாக இருக்கும் என்பதில் உறுதியில்லை. ஏற்கனவே நாம் கண்டுள்ளோம் ஜப்பானிய Read more