திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 61

பாடல் – 61 ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் – வைகலும் மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (இ-ள்.) ஐஅறிவும் – ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய – (தீயவழியில் செல்லாது) தம்மிடத்து அடங்கி நிற்கும்படி, ஒழுகுதல் – நடத்தலும்; எய்துவது அரசனுக்கு வருவதாகிய தீங்கை, எய்தாமை – வராதபடி, முன்காத்தல் – முன் அறிந்து தடுத்தலும்; வைகலும் – நாடோறும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 60

பாடல் – 60 பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும் பாஅய் விலங்கின் பிறப்தபின் வெருவும் – புலந்தெரியா மக்கட் பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும் துக்கப் பிறப்பாய் விடும். (இ-ள்.) பேஎய் பிறப்பில் – பேயினது பிறப்புடையவர்களில், பெரு பசியும் – மிக்க பசியும்; பாஅய் விலங்கின் பிறப்பின் – பாயும் இயல்புடைய மிருகப்பிறப்படைந்த உயிர்களில், வெருவும் – அச்சமும்; புலம் தெரியா – அறிவாகியபொருளை உணராத, மக்கள்பிறப்பின் – மனிதப் பிறப்படைந்த Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 59

பாடல் – 59 கிளைஞர்க் குதவாதான் செல்வமும் பைங்கூழ் விளைவின்கண் போற்றான் உழவும் – இளையனாய்க் கள்ளுண்டு வாழ்வான் குடிமையும் இம்மூன்றும் உள்ளன போலக் கெடும். (இ-ள்.) கிளைஞர்க்கு – சுற்றத்தார்க்கு, உதவாதான் – உதவாதவனுடைய, செல்வமும் – பொருளும்; பைங்கூழ் – பசிய பயிர், விளைவின்கண் – தனக்குப் பயன் கொடுக்குங் காலத்து, போற்றான் – அதனைக் காக்கும் இயல்பில்லாதவனுடைய, உழவும் – உழவுத் தொழிலும்; இளையனாய் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 58

பாடல் – 58 பழமையை நோக்கி அளித்தல் கிழமையால் கேளிர் உவப்பத்தழுவுதல் – கேளிராய்த் துன்னிய சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும் மன்னற் கிளையான் தொழில். (இ-ள்.) பழமையை – (நண்பரின்) பழையராகுந் தன்மையை. நோக்கி – பாராட்டி, அளித்தல் – (அவருக்கு வேண்டுவனகொடுத்து) காப்பாற்றுதலும், கேளிர் – சுற்றத்தார், உவப்ப – மகிழும்படி. கிழமையால் – உரிமையால், தழுவுதல் – அணைத்தலும்; கேளிர் ஆய் – உறவினராய், துன்னிய – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 57

பாடல் – 57 கொட்டி யளந்தமையாப் பாடலும் தட்டித்துப் பிச்சைபுக் குண்பான் பிளிற்றலும் – துச்சிருந்தான் ஆளுங் கலங்கா முறுதலும் இம்மூன்றும் கேள்வியுள் இன்னா தன. (இ-ள்.) கொட்டி – தாளவோசையால், அளந்து – அளவிட்டு அமையாப் பாடலும் – அதற்குத் தகுந்தபடி பாடாத பாடலும் தட்டி – கைதட்டி, து பிச்சை – சோற்றுப் பிச்சைக்கு, புக்கு – போய், உண்பான் – வாங்கி உண்ணுபவனுடைய, பிளிற்றலும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 56

பாடல் – 56 முந்தை எழுத்தின் வரவுணர்ந்து பிற்பாடு தந்தையும் தாயும் வழிபட்டு – வந்த ஒழுக்கம் பெருநெறி சேர்தலிம் மூன்றும் விழுப்ப நெறிதூரா வாறு. (இ-ள்.) முந்தை – (முன்னதாகிய) இளமைப் பருவத்தில், எழுத்தின் வரவு – கல்வியறிவு உண்டாதலும்; பிற்பாடு – அதன்பின்பு, உணர்ந்து – கல்விப் பொருள் உணர்ந்து, தந்தையும் தாயும் – தந்தையையும் தாயையும், வழிபட்டுவந்த – போற்றிவந்த, ஒழுக்கம் – ஒழுக்கமும்; பெருநெறி Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 55

பாடல் – 55 அருமறை காவாத நட்பும் பெருமையை வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் யாண்டானும் செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பும் இம்மூவர் ஒற்றாள் எனப்படு வார். (இ-ள்.) அருமறை – பிறர்க்கு வெளிப்படுத்தக்கூடா மறை மொழியை, காவாத – காப்பாற்றாத, நட்பும் – நட்பாளனும்; பெருமையை – பெருமைக்குணத்தை, வேண்டாது, விரும்பாமல், விட்டு – தலைவன் குறைகளை வெளிப்படுத்தி, ஒழிந்த – தருமத்தினின்றும் நீங்கிய, பெண்பாலும் – பெண்ணும்; யாண்டானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 54

பாடல் – 54 தன்பயம் தூக்காரைச் சார்தலும் தாம்பயவா நன்பயம் காய்வின்கண் கூறலும் – பின்பயவாக் குற்றம் பிறர்மேல் உரைத்தலும் இம்மூன்றும் தெற்றென வில்லார் தொழில். (இ-ள்.)தன்பயம் – தனக்கு வரும் பயனை, தூக்காரை – ஆராய்ந்து அதற்கு உதவி செய்யாதாரை, சார்தலும் – அடுத்தலும்; காய்வின்கண் – ஒருவன் சினமுற்ற காலத்து, தாம் பயவா – தாம் பயன்படாமல் போவனவாகிய, நல் பயம் – நன்மையாகிய பயனைத் தரும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 53

பாடல் – 53 குருடன் மனையாள் அழகும் இருள்தீரக் கற்றறி வில்லான் தழ்ந்துரையும் – பற்றிய பண்ணின் தெரியாதான் யாழ்கேட்பும் இம்மூன்றும் எண்ணின் தெரியாப் பொருள். (இ-ள்.) குருடன் – குருடனுடைய, மனையாள் – மனைவியினது, அழகும் – அழகும்; இருள்தீர – மயக்கம் நீங்க, கற்று – (உண்மை நூலைக்) கற்று, அறிவிலான் – அதன் பொருளை அறியாதவன், கதழ்ந்து – விரைந்து, உரையும் – சொல்லுகின்ற சொல்லும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 52

பாடல் – 52 கண்ணுக் கணிகலம் கண்ணோட்டம் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை – நண்ணும் மறுமைக் கணிகலம் கல்வியிம் மூன்றும் குறியுடையோர் கண்ணே யுள. (இ-ள்.) கண்ணுக்கு – கண்களுக்கு, அணிகலம் – அணியத் தக்க பூணாவது, கண்ணோட்டம் – கண்ணோடுதல்; காமுற்ற – (கணவனால்) விரும்பப்பட்ட, பெண்ணுக்கு – குலமகளுக்கு, அணிகலம் – அணிகலனாவது, நாண் உடைமை – நாணம் உடையவளாயிருத்தல்; நண்ணும் – பொருந்துகின்ற, மறுமைக்கு Read more