திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80 முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. (இ-ள்.) முறை செய்யான் – முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற – அடைந்த, தலைமையும் – தலைமைத் தன்மையும், நெஞ்சில் – மனத்தில், நிறை இலான் – உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட – மேற்கொண்ட தவமும் – தவமும்; நிறை ஒழுக்கம் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 79

பாடல் – 79 பழியஞ்சான் வாழும் பசுவும் அழிவினால் கொண்ட அருந்தவம் விட்டானும் – கொண்டிருந் தில்லஞ்சி வாழும் எருதும் இவர்மூவர் நெல்லுண்டல் நெஞ்சிற்கோர் நோய். (இ-ள்.) பழி அஞ்சான் – (உலகம் பழிக்கும்) பழிப்புக்குப் பயப்படாமல், வாழும் – உயிர் வாழ்கின்ற, பசுவும் – பசுப்போல்வானும்; அழிவினால் – கேடு வந்த போது, கொண்ட – (தனக்கு உரித்தாகக்) கொண்ட, அருந்தவம் – அரிய தவத்தினை, விட்டானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 78

பாடல் – 78 தூய்மை யுடைமை துணிவாம் தொழிலகற்றும் வாய்மை யுடைமை வனப்பாகும் – தீமை மனத்தினும் வாயினுஞ் சொல்லாமை மூன்றும் தவத்தில் தருக்கினார் கோள். (இ-ள்.) தூய்மை உடைமை – மனத் தூய்மை யுடையராயிருத்தலும்; துணிவு ஆம் – (மெய்நூல்களாலே) துணியப் பட்ட, தொழில் – நற்செய்கையை, அகற்றும் – விரிக்கின்ற, வாய்மையுடைமை – உண்மையுடையவனாயிருத்தலும்,வனப்பு ஆகும் – மங்கையருடைய அழகாகிய, தீமை – தீமையைத் தருவதனை, மனத்தினும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 77

பாடல் – 77 கயவரைக் கையிகந்து வாழ்தல் நயவரை நள்ளிருளுங் கைவிடா நட்டொழுகல் – தெள்ளி வடுவான வாராமல் காத்தலிம் மூன்றும் குடிமா சிலர்க்கே யுள. (இ-ள்.) கயவரை – கீழ்மக்களை, கையிகந்து – கைவிட்டு (சேராமல்,) வாழ்தல் – வாழ்தலும்; நயவரை – நீதியுடையவரை, நட்டு – நட்புச் செய்து, நள் இருளும் – நடு இரவிலும், கைவிடா – கைவிடாமல், ஒழுகல் – (அவருக்கு இணங்க) நடத்தலும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 76

பாடல் – 76 மாரிநாள் வந்த விருந்தும் மனம்பிறிதாய்க் காரியத்திற் குன்றாக் கணிகையும் – வீரியத்து மாற்றம் மறுத்துரைக்குஞ் சேவகனும் இம்மூவர் போற்றற் கரியார் புரிந்து : (இ-ள்.) மாரிநாள் – மழைக்காலத்தில், வந்த விருந்தும் – வந்த விருந்தினரும், மனம் பிறிதாய் – தன் மனம் வேறொன்றிற் சென்றும், காரியத்தில் – பொருள் வருவாயினை மேற்கொள்ளுதலில், குன்றா – குறைவுபடாத, கணிகையும் – வேசையும்; வீரியத்து – (போரில் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75

பாடல் – 75 வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (இ-ள்.) வள்ளன்மை – வரையாது கொடுத்தலை, பூண்டான்கண் – அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள, செல்வமும் – பொருளும்; உள்ளத்து – உள்ளத்தில், உணர்வு உடையான் – (கேட்டதனை) நினைத்துப் பார்க்கும் இயல்புடையவன், ஓதிய நூலும் – கற்ற நூற்புலமையும்; புணர்வின்கண் – (பிறர் தன்னைச்) Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 74

பாடல் – 74 கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர் புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன் றீகென் பவனை நகுவானும் இம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். (இ-ள்.) கொலைநின்று – கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் – (ஓருயிரை வதைத்து) அதன் இறைச்சியைத் தின்பவனும்; பெரியவர் – பெரியோர், புல்லுங்கால் – தன்னைத் தழுவும்போது, தான் புல்லும் – (அவரோடொப் பவனாகத் தன்னை மதித்துத்) தானும் அவரை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 73

பாடல் – 73 இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய துணிந்துவாழ் வார். (இ-ள்.) இரந்துகொண்டு – (இல்லாமையால் பிறரிடம்) கெஞ்சிப் பெற்று, ஒண்பொருள் – ஒள்ளிய பொருளை, செய்வல் என்பானும் – ஈட்டுவன் என்று கூறும் இரப்போனும்; பரந்து – (பலரிடத்தும்) சென்று, ஒழுகும் நடக்கின்ற, பெண்பாலை – பெண்வகுப்பைச் சேர்ந்த வேசையை,பாசம் என்பானும் அன்புடையாளெனக் கருதும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 72

பாடல் – 72 நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும் மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும் திறவதில் தீர்ந்த பொருள். (இ-ள்.) நிறை – புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும், நெஞ்சு உடையானை – நெஞ்சுடையவனுக்கு, நல்குரவு அஞ்சும் – வறுமை பயப்படும்; அறனை – அறத்தையே, நினைப்பானை – நினைக்கின்றவனுக்கு, அல்பொருள் – பாவம், அஞ்சும் – பயப்படும்; மறவனை – கொலையாளிக்கு, எவ்வுயிரும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 71

பாடல் – 71 உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும் காண அரியவென் கண். (இ-ள்.) உடுத்த ஆடை – உடுக்கப்பட்ட ஆடை, இல்லாதார் – இல்லாதவர், நீர் ஆட்டும் – நீராடுதலும்; பெண்டிர் பெண்கள், தொடுத்து – (பிறரோடு) வழக்குத் தொடுத்து, ஆண்டு – அங்குள்ள, அவை – சபைகளிடத்தில், போர் புகலும் – போர்க்குப் புகுதலும்; Read more