என்னையா கேஸு? ”
“ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா !!”
“அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா!” பொறுமையாக டீ யை குடித்தவர் லாக்கப்பைத் திறந்து அவனருகில் அமர்ந்து,
“வெட்டிக் கொல்ற அளவு அப்பிடி என்னையா கோவம் உனக்கு ?!”
“சார் காலைல வேலைக்கு போய்ட்டு வீட்டுக்கு வரும்போது வீட்ல இருந்து இன்னோரு ஆம்பள வெளியில வந்தா எந்த ஆம்பளையா இருந்தாலும் இதத்தான் சார் பண்ணுவான்!”
“அதுக்கில்லையா உம்மூஞ்சப் பாத்தா கொல பன்றளவுக்கு போறவனாத் தெரியலையே! நீ கொஞ்சம் அவசரப் பட்டுட்டியோன்னு தோணுதுயா!”
“அவள அடிச்சி பத்தி விட்டுட்டு உன்ன புரிஞ்சவள ஒருத்திய சேத்துகிட்டு நீ வாழ்ந்திருக்கலாமேயே. அவளையும் கொன்னுட்டு வாழ் நாள் பூரா ஜெயில்ல கழிஞ்சி ரெண்டு பேரு வாழ்க்கையும் வீணாப் போச்சேயே?”
“நம்மளத்தான் நல்லவனாவே இருக்க விட மாட்றாளுங்களே சார்! கல்யாணத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன் தெரியுமா சார் !?” என குலுங்கி அழ ஆரம்பித்து விட்டான்!
”அதுக்குத்தான்யா அந்த ஒரு நிமிஷம் நீ உங்கோபத்த கட்டுப்படுத்தி இருக்கலாம்! அப்புறம் மிருகங்களுக்கும் நமக்கும் என்னய்யா வித்தியாசம் ??! உணர்ச்சிகள கட்டுப்படுத்த தெரிஞ்சவன்தான் மனுஷன்! நீ அந்த நொடி மனுஷனா நடந்துகிட்டிருக்கலாம்! இப்ப என்ன பாரு ஒரு நாளிக்கி எத்தன பாக்கறேன் எவ்ளோ டென்ஷன்லயும் இவ்ளோ மனக் கட்டுப்பாட்டோட இருக்கேன், கொஞ்சம் நேரம் உங்க ரெண்டு பேரையும் உக்கார வச்சி கவுன்சிலிங் கொடுத்திருந்தா பரஸ்பரம் பிரிஞ்சோ மனசு மாறி ஒன்று சேர்ந்தேகூட வாழ்ந்திருக்கலாம்! அவசரப்பட்டு இப்படி வெட்டி போட்டுட்டு வந்து நிக்கறையே! போய்யா …” என்று சொல்விட்டு,
“கதிரேசா நைட் டூட்டி யாருய்யா ?!”
“ஐயா நம்ம மனோகரும் அந்த புது பையன் சுகுமாரும்யா!”
“சரிய்யா நான் கெளம்பறேன் பாத்துக்க. அவன் மேல ஒரு கண்ணு வச்சிக்க சொல்லுய்யா! ஏதாவது பண்ணிக்க கிண்ணிக்கப் போறான்! காலைல கோர்ட்ல ஆஜர் பண்ணணும். வறன்யா.”
இரவு 11.40 வீட்டிற்கு வந்த இன்ஸ்பெக்டர் காலிங் பெல்லை அழுத்தப் போக கதவு தாளிடப் படமால் இருந்தது. திறந்து உள்ளே சென்ற அவர் பெட்ரூமில் ஏதே சலசலப்பும், பேச்சுக்குரலும் கேட்க கதவைத் திறந்தார்! உள்ளே அவர் கண்ட காட்சி அவரை நிலைகுலையச் செய்தது! தானிருக்க வேண்டிய இடத்தில் வேறொருவனைப் பார்த்த அவருக்கு இரத்தம் சூடாகி கொப்பளித்த கோபத்தில் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் மாறி மாறி தோட்டாக்கள் தீரும் வரை சுட்டார் !! இருவரது உடலும் சிறிது நேரம் துடித்து அதே இடத்தில் அடங்கிப் போனது!
சில நிமிடங்களுக்குப் பிறகு சுய நினைவு வந்த இன்ஸ்பெக்டர் தலையில் கைவைத்துக்கொண்டு கீழே அமர்ந்தார் !!
மறுநாள் கோர்ட்டுக்குப் புறப்படும் போலீஸ் வேனில் அந்தக் கைதியோடு இன்ஸ்பெக்டரும் கை விளங்கோடு !!
இப்போது அவன்
“சார் மனுஷங்க எல்லாருமே உணர்ச்சிகளுக்கு அடிமையானவங்கதான் சார்! உணர்ச்சிகள கட்டுப்படுத்த தெரிஞ்சவங்கதான் சார் !! ஆனா அதையும் மீறும் சந்தர்ப்பங்களில் இதுதான் சார் !! என்ன அப்போ எங்கையில கத்தி !? உங்க கையில துப்பாக்கி அவ்ளதான் சார் வித்தியாசம் !!”