என்னதான் மாயம் செய்தாய் கண்ணா .. !!
என்னுள் இளகும் ..
இந்தப் பெண்ணுள் ..
புகுந்து நீ ! என்னதான் மாயம் செய்தாய் !!

பார்த்த விழி பார்த்தபடி நிற்க
வைத்தாய் என்னை ..!
பைத்தியம் போல் உன்னழகில்
சொக்க வைத்தாய் .. !!

கோதையிவள் மெய்யோடு மெய்யணைத்து ..
கொஞ்சினாய் ..! கெஞ்சினாய் .. !!
பின் குளிர வைத்தாய் !!

மல்லிகை மலர் சூடி
மஞ்சத்திலேஉன் மார்பினில்
சாய்ந்திருக்க கனவு கண்டேன் … !!

அள்ளயெடுத்து என்னை அணைத்து
மெல்ல .., செய்த அணங்கனின்
லீலைகள் என்ன சொல்ல ..?

உள்ளும் புறமாகி நீ நின்றாயடா ..!
தீயில் உருகும் மெழுகாக்கி
எனைக் கொன்றாயடா . !!

சொல்லிலே தேனிழைத்து
சொன்ன சொல்லால்
சுந்தரி என்னை நீ வென்றாயடா .. !!


1 Comment

சௌந்தர்யன் · ஆகஸ்ட் 6, 2017 at 22 h 13 min

சுந்தரன்யென்
சிந்தைக்
கவர்ந்தாயடி
சகியே…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்