குஞ்சி யழகுங் கொடுந்தானைக் கோட்டழகு
மஞ்ச ளழகு மழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யா மென்னு நடுவு நிலைமையாற்
கல்வி யழகே யழகு.

என்று கல்வியின் அவசியம் பற்றி நாலடியார் அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் கல்விக்கு நிகராகக் கல்வியைத்தான் கூறமுடியும். இக்கல்வி தமது பிள்ளைகளுக்கு வாய்க்கப் பெறுவதற்குப் பெற்றோர் தம்மாலான முயற்சிகளில் ஈடுபடுகின்றார்கள். கற்பதற்கான வசதிவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கின்றார்கள்.

கற்றல் என்பது எல்லோராலும் முடியும்.  படித்தவிடயங்களை ஞாபகப்படுத்துவதற்கு நிச்சயமாக ஒவ்வொருவரும் படித்தல் வேண்டும். நீங்கள் பார்த்தது, கேட்டது, படித்தது, உணர்ந்தது, சுவைத்தது, நுகர்ந்ததுentrance-exam-fi எல்லாமே எங்கள் மூளையில் பதியப்பட்டிருக்கும். முக்கியமான விடயங்களைச் சிறிதுநேரம் தொடர்ச்சியாகத் திரும்பத் திரும்ப நினைக்க வேண்டும். பின் நீங்கள் நினைக்காமலே இவ்விடயங்கள் மனக்கண்முன் வந்து நிற்கும். உதாரணமாக தொடர்ச்சியாக நீங்கள் வேலைக்குச் செல்லும் வழியைச் சிந்தித்துப் பாருங்கள். முதல்நாள் முழுக்கவனம் எடுத்துச் சென்ற பாதை ஓரிரு நாட்களின் பின் உங்கள் மனதில் துல்லியமாகப் பதியப்படும். இப்படித்தான் படிப்பும் தொடர்ச்சியாகச் செய்கின்ற போது ஆழமாக மனதில் பதிகின்றது. ஒரு விடயத்தை 3 கிழமைக்குப் பயிற்சி செய்தல் மனப்பதிவுக்கு சிறந்த பயிற்சியாகும். இதற்கு மன ஒருமைப்பாடும் அவசியப்படுகின்றது. எந்தவித கடினமும் இல்லாமல் மூச்சை உள்ளெடுத்து வெளிவிடுவதை அவதானியுங்கள். இதனை நிமிடக்கணக்கில் செய்யுங்கள். இப்படிச் செய்கின்ற போது வேறு எண்ணங்கள் வந்து தடை செய்யாது. இதைத் தொடர்ச்சியாகச் செய்துகொண்டு வாருங்கள். உங்கள் மூளை இலகுவாகும்.

படிக்கின்ற அறையினுள் பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்க வேண்டும். ஆனால், அவ்வெளிச்சம் படிக்கின்ற பிள்ளையின் எதிரே இருக்கக் கூடாது. கூடுதலான வெளிச்சத்தைக் கண்ணுக்குக் கொடுக்கும்போது எங்கள் கண்களினால் மிகவும் பாரத்தைத் தூக்கவிடுகின்றோம். மிக்க இருட்டுள்ள அறையாக இருக்கும் போது வித்தியாசமான ஓமோன்கள் சுரக்கப்பட்டு எமக்குக் களைப்பு ஏற்படுகின்றது. எனவே பொருத்தமில்லாத வெளிச்சம் களைப்பையும் பார்வை இடையூறுகளையும் சிந்தனைக் களைப்பையும் ஏற்படுத்தும். எனவே நேரடியான சூரியவெளிச்சத்தைத் தவிர்த்து சிறப்பான அளவான சூரியவெளிச்சத்தை அறையினுள் வரவிடுங்கள். இடது கைப்பழக்கமுள்ளவர்கள் வலதுபக்கம் இருந்து வெளிச்சம் வரச்செய்வதுடன் வலது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இடது கைப்பக்கம் இருந்து வெளிச்சம் வரும்படியாகவும் ஒழுங்கு செய்யுங்கள். இப்படியாக ஒழுங்குபடுத்தும்போது நிழல் படிக்கின்ற புத்தகங்களில் படியாமல் தவிர்க்கலாம்.

நல்ல காற்றோட்டமுள்ள அறையைத் தெரிவுசெய்ய வேண்டும். அந்த அறையினுள் போதுமான ஒட்சிசன் கிடைக்கப் பெறாவிட்டால், மூளைக்குத் தேவையான ஒட்சிசனை இரத்தம் கொண்டு சென்று கொடுக்காது.

படிக்கின்றபோது நிமிர்ந்து இருக்க வேண்டும். அப்போது மூளைக்குச் சீரான ஒட்சிசன் ஓட்டம் கிடைத்து போதுமான சத்துக்களைப் பெறும்.

சாப்பாட்டு மேசையைப் படிக்கும் மேசையாகப் பயன்படுத்தாதீர்கள்.

படுத்துக் கொண்டு படிப்பதைத் தவிர்க்க வேண்டும். படுக்கின்றபோது உடலுக்கு களைப்பு ஏற்படும். இந்த நிலை படிப்பைத் தாக்கும். இது சமையலறை மேசைபோல் வேறு சிந்தனையைக் கொண்டு வரும்.

நெருக்கமான அறையாக இருத்தல் கூடாது. நெருக்கமான அறை மன ஒருமைப்பாட்டைக் குறைக்கும்.

ஒரு போத்தல் தண்ணீரை படிக்கின்றபோது அருகில் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் உங்கள் நல்ல நண்பன். நீங்கள் நல்ல உணர்வுகளை இழக்கின்ற போது குடிக்கின்ற தண்ணீரை நல்ல உணர்வுகளைத் தந்து மீண்டும் படிக்கின்ற சூழலுக்கு உங்களைக் கொண்டு வரும்.

சிலருக்கு இசை கேட்டுக் கொண்டு படிப்பது படிப்பின் ஆர்வத்தைத் தூண்டுவதாகக் கூறுகின்றார்கள். இசையினால் இருபக்க மூளையும் வேலை செய்கின்றது என்பது விஞ்ஞானிகள் கருத்து. அமைதியான பின்புல இசை கணிதம் செய்வதற்கு மிகவும் உதவுகின்றது. தயவுசெய்து ஆக்கிரமிப்பான ஒலிகளைப் படிப்பின்போது பயன்படுத்த வேண்டாம். தியானம் செய்வதற்குப் பயன்படுத்தும் இசை நல்லதல்ல. இது எங்கள் மூளையிலுள்ள சிந்திக்கும் தன்மையைச் செயல்படுத்த மாட்டாது. இவ்வாறான இசை கற்கும் முயற்சியைத் தடுக்கும் அல்லது நிறுத்திவிடும். வானொலியைச் சிறப்பு என்று கூறமுடியாது. அதில் வரும் விளம்பரங்கள் மூளையை வேறுபக்கம் திசைதிருப்பிவிடும்.

நீங்கள் உங்கள் பிள்ளைக்கு இசையுடனா? அல்லது இசையில்லாமலா? கூடுதலான மனஒருமைப்பாடு இருக்கின்றது என்பதை முக்கியமாக அறியவேண்டும். அதன்படியே உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும்.

படுக்கைக்குப் போகும் முன் முக்கியமான பாடம் சம்பந்தமான விடயங்களை ஒலிநாடாவில் பதிந்து கட்டிலில் கேட்டுக் கொண்டு படுத்தல் நல்லது. எங்கள் மூளை அரைநித்திரையில் நன்றாகப் பதிவை எடுத்துக் கொள்ளும்.

மூளையானது 90 தொடக்கம் 120 நிமிடங்கள் ஒரு விடயத்தில் ஒருமைப்பாட்டுடன் இருக்கும். அதன்பின் 15 தொடக்கம் 30 நிமிடங்கள் ஓய்வு எடுத்தல் சிறப்பு. இந்த நேரத்தில் நீர்குடித்தல், உடல் அசைவை ஏற்படுத்தல், இடையிடையே யன்னலைத் திறந்து ஒட்சிசனை அறையினுள் வருவதற்கு இடம் அளித்தல் போன்ற விடயங்களில் ஈடுபடலாம்.

படிக்கின்ற விடயங்களை எழுதிவைத்தல் சிறப்பு. சுருக்கமாக எழுதியவற்றை நாட்குறிப்பேட்டில் அல்லது அடிக்கடிப் பார்வையிடும் பக்கத்தில் எழுதி வைக்கலாம்.

எல்லாவற்றிற்கும் நல்ல மனநிலை தேவைப்படுகின்றது. நல்ல மனநிலை இருக்கும் போதுதான் எங்களுடைய மூளை அன்ரெனா சிறப்பாக வேலைசெய்யும்.

எனவே கற்றல் என்பதும் ஒரு கலை. முழு மனதுடன் கற்கும் போதும் சரியான விடயங்களை முன்னெடுக்கும் போதும் கல்வியே எங்களுக்குப் பிடித்த விடயமாகிப் போகின்றது.


1 Comment

kowsy2010 · ஜூன் 13, 2016 at 17 h 59 min

மிக்க நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »