திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75

பாடல் – 75 வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத் துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண் தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர் பொத்தின்றிக் காழ்த்த மரம். (இ-ள்.) வள்ளன்மை – வரையாது கொடுத்தலை, பூண்டான்கண் – அணியாக மேற்கொண்டவனிடத்துள்ள, செல்வமும் – பொருளும்; உள்ளத்து – உள்ளத்தில், உணர்வு உடையான் – (கேட்டதனை) நினைத்துப் பார்க்கும் இயல்புடையவன், ஓதிய நூலும் – கற்ற நூற்புலமையும்; புணர்வின்கண் – (பிறர் தன்னைச்) Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 74

பாடல் – 74 கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர் புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன் றீகென் பவனை நகுவானும் இம்மூவர் யாதுங் கடைப்பிடியா தார். (இ-ள்.) கொலைநின்று – கொல்லுந் தொழிலில் நீங்காது நிலைபெற்று, தின்று ஒழுகுவானும் – (ஓருயிரை வதைத்து) அதன் இறைச்சியைத் தின்பவனும்; பெரியவர் – பெரியோர், புல்லுங்கால் – தன்னைத் தழுவும்போது, தான் புல்லும் – (அவரோடொப் பவனாகத் தன்னை மதித்துத்) தானும் அவரை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 73

பாடல் – 73 இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும் பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும் விரிகட லூடுசெல் வானுமிம் மூவர் அரிய துணிந்துவாழ் வார். (இ-ள்.) இரந்துகொண்டு – (இல்லாமையால் பிறரிடம்) கெஞ்சிப் பெற்று, ஒண்பொருள் – ஒள்ளிய பொருளை, செய்வல் என்பானும் – ஈட்டுவன் என்று கூறும் இரப்போனும்; பரந்து – (பலரிடத்தும்) சென்று, ஒழுகும் நடக்கின்ற, பெண்பாலை – பெண்வகுப்பைச் சேர்ந்த வேசையை,பாசம் என்பானும் அன்புடையாளெனக் கருதும் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 72

பாடல் – 72 நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும் அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும் மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும் திறவதில் தீர்ந்த பொருள். (இ-ள்.) நிறை – புலன்கள்மேற் போகாமல் நிறுத்தப்படும், நெஞ்சு உடையானை – நெஞ்சுடையவனுக்கு, நல்குரவு அஞ்சும் – வறுமை பயப்படும்; அறனை – அறத்தையே, நினைப்பானை – நினைக்கின்றவனுக்கு, அல்பொருள் – பாவம், அஞ்சும் – பயப்படும்; மறவனை – கொலையாளிக்கு, எவ்வுயிரும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 71

பாடல் – 71 உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர் தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும் ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும் காண அரியவென் கண். (இ-ள்.) உடுத்த ஆடை – உடுக்கப்பட்ட ஆடை, இல்லாதார் – இல்லாதவர், நீர் ஆட்டும் – நீராடுதலும்; பெண்டிர் பெண்கள், தொடுத்து – (பிறரோடு) வழக்குத் தொடுத்து, ஆண்டு – அங்குள்ள, அவை – சபைகளிடத்தில், போர் புகலும் – போர்க்குப் புகுதலும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70

பாடல் – 70 காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால் வேதம் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந் தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர் செல்வ ரெனப்படு வார். (இ-ள்.) காவோடு – சோலையை உண்டாக்குதலுடன், அறக்குளம் – அறத்துக்குரிய குளத்தை, தொட்டானும் – தோண்டுவித்தவனும்; நாவினால் – நாவினால் ஓதி, வேதம் – வேதத்தை, கரை கண்ட – முடிவுகண்ட, பார்ப்பானும் – அந்தணனும்; தீது – தீய வழியை, இகந்து Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 69

பாடல் – 69 அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் – நொந்து நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும் பெறுமா றரிய பொருள். (இ-ள்.) அரும்தொழில் – (உழுதல் பெருஞ்சுமை தாங்குதல் முதலிய) அரிய தொழிலை, ஆற்றும் பகடும் – செய்யவல்ல கடாவும், திருந்திய – குற்றமற்ற, மெய்நிறைந்து – உடலிலக்கணம் நிரம்பி, நீடு இருந்த – நெடுநாள் (மணமின்றி) இருந்த, கன்னியும் – இளம் பெண்ணும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80 முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில் நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம் தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் தூற்றின்கண் தூவிய வித்து. (இ-ள்.) முறை செய்யான் – முறையறிந்து செய்யமாட்டாதவன், பெற்ற – அடைந்த, தலைமையும் – தலைமைத் தன்மையும், நெஞ்சில் – மனத்தில், நிறை இலான் – உறுதிப்பாடு இல்லாதவன், கொண்ட – மேற்கொண்ட தவமும் – தவமும்; நிறை ஒழுக்கம் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 68

பாடல் – 68 இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும் நன்றறியும் மாந்தர்க் குள. (இ-ள்.) இல்லார்க்கு – வறியவர்க்கு, ஒன்று ஒருபொருளை ஈயும் – கொடுக்கும், உடைமையும் – செல்வமும்; இவ்வுலகில் – இவ்வுலகத்தின் பொருள்களின், நில்லாமை – நிலையாமையை, உள்ளும் ஆராய்ந்து அறியும், நெறிப்பாடும் – வழியில் பொருந்துதலும்; எவ்வுயிர்க்கும் – எல்லா வுயிர்க்கும், துன்பு Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 67

பாடல் – 67 எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும் செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி – மயிர்நரைப்ப முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும் நொந்தார் செயக்கிடந்த தில். (இ-ள்.) எதிர் நிற்கும் – (தாம் சினந்தால்) தம் எதிர்நின்று பேசும்; பெண்ணும் – மனையாளும்; இயல்பு இல் – ஒழுக்கமில்லாத, தொழும்பும் – ஏவலாளும்; செயிர் – பகை, நிற்கும் – கெடாது நிற்கும், சுற்றமும் – உறவினரும், ஆகி – Read more