திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 29

பாடல் – 29 பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (இ-ள்.) பெண் – ஒரு பெண், விழைந்து – விரும்பி, பின் செலினும் – பின் சென்றாலும், தன் செலவில் – தன்னடக்கையில், குன்றாமை – குறையாமையும்; கண் விழைந்து – (தன்) இடந்தேடி, கை உறினும் – வந்து கைப்பட்டாலும், பொருட்கு – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 28

பாடல் – 28 வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர் உமிக்குத்திக் கைவருந்து வார். (இ-ள்.) வெல்வது – சொல்வென்றியை, வேண்டி – விரும்பி, வெகுண்டு உரைக்கும் – (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் – தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது – (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று – விரும்பி, இருப்பானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 27

பாடல் – 27 உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில். (இ-ள்.) உண்பொழுது – உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி – குளித்து, உண்டலும் – உண்ணுதலும்; என் பெறினும் – (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் – ஒரு பக்கம், பற்றி – சார்ந்து, சொல்லா விடுதலும் – பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 26

பாடல் – 26 ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற் சீல மினிதுடைய வாசானும் இம்மூவர் ஞால மெனப்படு வார். (இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் – அறியவல்ல, விருந்தினனும் – அதிதியும்; ஆர் உயிரை – அருமையாகிய உயிரை, கொல்வது – (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி – கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 24

பாடல் – 24 காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு. (இ-ள்.) காண் தகு – காணுதற்குத் தக்க, மென்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – வேசையின், வாய் – வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் – இனிய மொழியும்; தூண்டிலினுள் – தூண்டிலினிடத்து, பொதிந்த – (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 23

பாடல் – 23 தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் – தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்வினை யார்க்குங் கயிறு. (இ-ள்.) தானம் – தானத்தை, கொடுக்கும் – கொடுக்கின்ற, தகைமையும் – பெருஞ் செய்கையும்; மானத்தார் – பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த – குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் – நல்லொழுக்கமும்; தெள்றென – தெளிய (உண்மையாக), பல் பொருள் பல விடயங்களினின்றும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 22

பாடல் – 22 பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடும் அவாத்தேருந் – தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (இ-ள்.) பற்று என்னும் – பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் – கயிற்று விலங்கும், பலவழியும் – பல பொருள்களிலும், பற்று – பிடிப்பு, அறாது – நீங்காமல், ஓடும் – ஓடுகின்ற, அவாத் தேரும் – விருப்பமாகிய தேரும்; தெற்றென – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 21

பாடல் – 21 வருவாயுட் கால்வாழங்கி வாழ்தல் செருவாய்ப்பச் செய்தவை நாடாச் சிறப்புடைமை – எய்தப் பலநாடி நல்லவை கற்றல் இம்மூன்றும் நலமாட்சி நல்லவர் கோள். (இ-ள்.) வருவாயுள் – தமக்கு வரும் பொருள்களிலே, கால் – நான்கி லொரு பங்கு, வழங்கி – (அறத்திற்) செலவு செய்து, வாழ்தல் – வாழ்தலும்; செரு – போரினிடத்து, வாய்ப்ப – (வெற்றி) கிடைப்ப, செய்தவை – (தான்) செய்த செயல்களை, Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 20

பாடல் – 20 ஆசை பிறன்கட் படுதலும் பாசம் பசிப்ப மடியைக் கொளலுங் – கதித்தொருவன் கல்லானென் றெள்ளப் படுதலும்இம்மூன்றும் எல்லார்க்கு மின்னா தன. (இ-ள்.) பிறன்கண் – பிறனொருவனிடத்துள்ள பொருளுக்கு, ஆசைப்படுதலும் – விருப்பத்தைச் செய்தலும், பாசம் – தன் சுற்றத்தார், பசிப்ப – பசித்திருக்க, மடியை – சோம்பலை, கொளலும் – கொள்ளுதலும்; கதித்து – வெறுத்து, ஒருவன் – ஒருவனால், கல்லான் என்று – கற்றிலன் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 19

பாடல் – 19 கொல்யானைக் கோடுங் குணமிலியு மெல்லிற் பிறன்கடை நின்றொழுகு வானு – மறந்தெரியா தாடும்பாம் பாட்டு மறிவிலியு மிம்மூவர் நாடுங்காற் றூங்கு பவர். (இ-ள்.) கொல் யானைக்கு – கொலை செய்வதாகிய (மத) யானைக்கு, ஓடும் – (பின்வாங்கி) ஓடுகின்ற, குணம் இலியும் – குணம் இல்லாத வீரனும்; எல்லில் – இரவிலே, பிறன் கடை – பிறன் வீட்டு வாயிலில் (அவன் மனையாளை விரும்பி), நின்று Read more