ஓடைநிலா

பிரான்சு நாட்டில் வாழும் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் அனுப்பிய புத்தக கட்டொன்று கிடைக்கப்பெற்று பிரித்தால் மிக அருமையான வடிவமைப்பில் ஒரு புத்தகம். சுவிஸ் நாட்டில் வசிக்கும் சகோதரி பைந்தமிழ்ச்செம்மல் நிர்மலா சிவராசலிங்கம் அவர்களது புத்தகம். மரபுக்கவிதை யாப்பதில் சிறந்து விளங்கும் சகோதரி அவர்களின் ஹைக்கூ கவிதைப் புத்தகம். அதுவும் இருமொழிக் கவிதைத் தொகுப்பு. ஆம் நூறு ஹைக்கூக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இருமொழிகளிலும் நிரம்பிய புத்தகம். வடிவமைப்பே கவிதைகளைப் படிக்கத் Read more

தென்றலின் தேடல்கள்

தென்றல் கவியை ஆண்டு விழாக்கள் கவியரங்கங்களில் அவ்வப் போது சந்திப்ப துண்டு. அவரது இயற்பெயர் யாதென அறியேன். அவரது தாயார் ஒரு சிறந்த கவிஞர். அவரது கவியரங்கத்தலைமை கண்டு வியந்து போயிருக்கிறேன். இவரது கவிதைகளிலும் அந்த தாக்கம் ஆங்காங்கே தெரியும். இவரது கவிதை நூல் ஒன்றைப் படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. அந்த கவிஞர் தென்றல் கவி (தமிழ்ச்சிட்டு) அவரது புத்தகத்தின் பெயர் தென்றலின் தேடல்கள். அட்டைப்படம் வெகு அருமை; Read more

ஸ்ரீமத் பகவத்கீதையும் திருக்குறளும் ( ஒப்பாய்வு – 6 )

தியானயோகம் தஞ்சைத் தமிழ் மன்றத்தின் கவியரங்கம் . அதற்கு வருவதாக ஒரு முகநூல் நண்பர் சொல்லியிருந்தார். முதல்நாளே முகவரியைக் கேட்டுப் பெற்றிருந்தார். வருவதாகச் சொல்பவர்கள் எல்லாம் எங்கே நிகழ்வுகளுக்கு வருகிறார்கள்? ஏதாவது காரணம் சொல்லிவிட்டு வாராமல் நின்று விடுகிறார்கள். ஆனால் இவர் அப்படியல்ல. நிகழ்வு தொடங்குமுன்னே வருகிறார். ஒல்லியான தேகம். சுறுசுறுப்பான நடை. வெண்ணிற மீசை. பளிச்சென்ற கண்கள். கண்டவுடனே எனக்குப் பெருமகிழ்வு. பெரும்பாலும் ஆங்கிலத்தில் உரையாடல்; சார் சார் Read more

பொன்மணிதாசன் கவிதைகள்

ஒரு வயதான அன்பர். வெள்ளைச் சட்டையுடன் முறுக்கிய மீசையுடன் தும்பைநிற வேட்டி சட்டையில் கவியரங்கம் நடக்கும் இடங்களில் ஒரு ஓரத்தில் அமர்ந்திருப்பார். அருகில் சென்று பேசினால் பேசுவார். இல்லையேல் அமைதியாக இருப்பார். அழைத்தால் மேடையில் வந்து கவிதை பாடுவார். இல்லையேல் அதுவும் இல்லாது சென்று விடுவார். இப்படி அறிமுகமானவர்தான் அக் கவிஞர். பொன்மணிதாசன் என்பது அவரது பெயர். பெயருக்குத் தகுந்தாற் போல பொன்மனத்துக்குச் சொந்தக்காரர். அமைதியானவர். ஆனால் தினம் ஒரு Read more