யார் அந்த நிலவு?
பக்கத்து வீட்டு பரிமளம் வந்து அந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து ரேகாவுக்கு இருப்புக்கொள்ளவில்லை. “நீ என்னப்பா சொல்றே? சரியா பார்த்தியா?” என்று மீண்டும் நம்பமுடியாதவளாய்க் கேட்டாள் ரேரகா. “பஜார்ல காய் கறி வாங்கப் போயிருந்தேம்பா. யாரோ ஒரு பொண்ணை ஸ்கூட்டர்ல உட்கார வச்சுக்கிட்டுப்போய்க்கொண்டிருந்தார் உன்னோட வீட்டுக்காரர்” – திரும்பவும் சொன்னாள் பரிமளா. ‘குபீர்’ என ஆத்திரம் அவள் உடல் முழுக்கப் பரவியது. யாரவள்? கேள்வி எழுந்து அவள் மண்டையைக் குடைய ஆரம்பித்தது. Read more

