திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 31

பாடல் – 31 பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) பல்லவையுள் – பல நூல்களிலும், நல்லவை – நல்ல நூற் பொருள்களை, கற்றலும் – கற்றுணர்தலும்; பாத்து – (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு – (தானும்) உண்டு, ஆங்கு – அந்நிலையில், இல்லறம் – இல்லாளோடு கூடிச் Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 30

பாடல் – 30 தன்னச்சிச் சென்றாரை யெள்ளா வொருவனும் மன்னிய செல்வத்துப் பொச்சாப்பு நீத்தானும் என்று மழுக்கா றிகந்தானும் இம்மூவர் நின்ற புகழுடை யார். (இ-ள்.) தன் நச்சி – தன்னை விரும்பி, சென்றாரை – அடைந்தவரை, எள்ளா ஒருவனும் – இகழாத ஒருவனும், மன்னிய – மிகுந்த, செல்வத்து – செல்வம் வந்த காலத்தில், பொச்சாப்பு – மறதியை, நீத்தானும் – நீக்கினவனும்; என்றும் – பிறரிடத்துப் பகைமை Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 29

பாடல் – 29 பெண்விழைந்து பின்செலினுந் தன்செலவிற் குன்றாமை கண்விழைந்து கையுறினுங் காதல் பொருட்கின்மை மண்விழைந்து வாழ்நாண் மதியாமை இம்மூன்றும் நுண்விழைந்த நூலவர் நோக்கு. (இ-ள்.) பெண் – ஒரு பெண், விழைந்து – விரும்பி, பின் செலினும் – பின் சென்றாலும், தன் செலவில் – தன்னடக்கையில், குன்றாமை – குறையாமையும்; கண் விழைந்து – (தன்) இடந்தேடி, கை உறினும் – வந்து கைப்பட்டாலும், பொருட்கு – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 28

பாடல் – 28 வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கு நோன்பிலியும் இல்லது காமுற் றிருப்பானுங் – கல்வி செவிக்குற்றம் பார்த்திருப் பானும்இம் மூவர் உமிக்குத்திக் கைவருந்து வார். (இ-ள்.) வெல்வது – சொல்வென்றியை, வேண்டி – விரும்பி, வெகுண்டு உரைக்கும் – (உண்மைப் பொருளை யுரைப்போரைச்) சினந்து சொல்கின்ற, நோன்பு இலியும் – தவம் இல்லாதவனும், (தீயோனும்,) இல்லது – (தனக்குக்) கிடைத்தற்கரிய பொருளை, காமுற்று – விரும்பி, இருப்பானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 27

பாடல் – 27 உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலுந் -தோல்வற்றிச் சாயினுஞ் சான்றாண்மை குன்றாமைஇம்மூன்றுந் தூஉய மென்பார் தொழில். (இ-ள்.) உண்பொழுது – உண்ணுதற்குரிய காலத்தில், நீர் ஆடி – குளித்து, உண்டலும் – உண்ணுதலும்; என் பெறினும் – (சாட்சியாகும் பொழுது) எவ்வளவு பெரும் பயனை அடைவதாயிருந்தாலும், பால் – ஒரு பக்கம், பற்றி – சார்ந்து, சொல்லா விடுதலும் – பொய்க்கரி சொல்லாமலிருத்தலும்; Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 26

பாடல் – 26 ஒல்வ தறியும் விருத்தினனு மாருயிரைக் கொல்வ திடைநீக்கி வாழ்வானும் – வல்லிதிற் சீல மினிதுடைய வாசானும் இம்மூவர் ஞால மெனப்படு வார். (இ-ள்.) ஒல்வது (தனக்குச்) செய்யக் கூடியதை, அறியும் – அறியவல்ல, விருந்தினனும் – அதிதியும்; ஆர் உயிரை – அருமையாகிய உயிரை, கொல்வது – (ஒருவன்) கொல்லுந் தொழிலை, இடை நீக்கி – கொல்வோனுக்கும் கொல்லப்படுவதற்கும் நடுவே (சென்று) விலக்கி, வாழ்வானும் – Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 25

பாடல் – 25 செருக்கினால் வாழுஞ் சிறியவனும் பைத்தகன்ற அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் – நல்லவர்க்கு வைத்த வறப்புறங் கொன்றானும் இம்மூவர் கைத்துண்ணார் கற்றறிந் தார். (இ-ள்.) செருக்கினால் – (பெரியோரை மதியாமல்) இறுமாப்புடன் : வாழும் – வாழ்கின்ற, சிறியவனும் – அறிவில்லாதவனும்; பைத்து – படத்தைப் போன்றதாய், அகன்ற – விசாலமான, அல்குல் – நிதம்பத்தினை, விலைபகரும் – விற்கும், ஆய் தொடியும் – ஆராய்ந்தெடுத்த வளையலணிந்த Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 24

பாடல் – 24 காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந் தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க் காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும் ஆழ்ச்சிப் படுக்கும் அளறு. (இ-ள்.) காண் தகு – காணுதற்குத் தக்க, மென்தோள் – மெல்லிய தோள்களையுடைய, கணிகை – வேசையின், வாய் – வாயிற் பிறக்கின்ற, இன்சொல்லும் – இனிய மொழியும்; தூண்டிலினுள் – தூண்டிலினிடத்து, பொதிந்த – (மீனுக்கு இரையாக அதன் முள்ளை மறைத்து) Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 23

பாடல் – 23 தானங் கொடுக்குந் தகைமையு மானத்தார் குற்றங் கடிந்த வொழுக்கமுந் – தெற்றெனப் பல்பொரு ணீங்கிய சிந்தையும் இம்மூன்றும் நல்வினை யார்க்குங் கயிறு. (இ-ள்.) தானம் – தானத்தை, கொடுக்கும் – கொடுக்கின்ற, தகைமையும் – பெருஞ் செய்கையும்; மானத்தார் – பழிக்கு நாணுதலுடையாரது, குற்றம் கடிந்த – குற்றத்தை நீக்கிய ஒழுக்கமும் – நல்லொழுக்கமும்; தெள்றென – தெளிய (உண்மையாக), பல் பொருள் பல விடயங்களினின்றும், Read more

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 22

பாடல் – 22 பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடும் அவாத்தேருந் – தெற்றெனப் பொய்த்துரை யென்னும் பகையிருளும் இம்மூன்றும் வித்தற வீடும் பிறப்பு. (இ-ள்.) பற்று என்னும் – பற்று என்று சொல்லப்படுகின்ற, பாசத்தளையும் – கயிற்று விலங்கும், பலவழியும் – பல பொருள்களிலும், பற்று – பிடிப்பு, அறாது – நீங்காமல், ஓடும் – ஓடுகின்ற, அவாத் தேரும் – விருப்பமாகிய தேரும்; தெற்றென – Read more