யாளியும்… சக்தியும்… 2

2 ‘கோயிலுக்கு வந்து, பாதியிலேயே திரும்பி போகலாமா..? தாத்தா..!’ என்று, சக்தி கேட்க… தாத்தா, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்… சிதறிய பூக்கூடையை எடுத்து, சக்தியை கையில் தூக்கிக் கொண்டு நடந்தார். வண்ண வண்ண பலூன்கள், ராட்டினங்கள், விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் புதிது புதிதாக சாலையின் இருபுறமும் நிறைந்து இருக்க… சக்தி மயங்கி விழுந்ததை மறக்கச் செய்ய ‘ஏதாச்சும் விளையாட்டுச் சாமான்கள் வேணுமா..? தங்கம்’ என்று, கேட்க… ‘அதெல்லாம், ஒன்னும் வேணாம்.ங்க தாத்தா..!’ என்றபடியே… தலையாட்டி பொம்மை, தலையைத் Read more