ஒழுக்கம்

இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்
     இன்றைய குமுகாய மிழந்த தெத்தனை
இயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)
      இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!
உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது
     உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!
செயலிலு மொழுக்கத்தைக் காட்டும் மானிடர்
      செம்மையாய் வாழ்ந்திடுவர் வழிகாட் டி டுவரே!

எத்துறை கண்டிடினும் கையூட் டரசியல்
      எங்கணும் நாள்தோறும் வன்முறைப் பாலியல்
இத்தரை மாந்தரெலா மின்று துன்புறும்
      இழிநிலை வந்ததுவே யிழந்த பண்பினால்!
முத்தமி ழிலக்கியங்கள் முன்னி றுத்திய
      முதுமொழி பின்பற்றும் முறைதா னொழுக்கமாம்!
தத்துவம் பேசுவதால் பயனொன் றுமில்லையே!
      தன்னொழுக் கம்பேணினால் தலைகு னிவில்லையே!

பயிரினை வேலியது மேய்ந்தாற் போலவே
      பண்பிலா மாந்தர்கள் உறவுப் போர்வையில்!
உயிரினைக் காத்திடுவோ(ம்) ஒழுக்க மேன்மையால்!
      உரக்கவே யுரைத்திடுவோம் நீதிக் கல்வியால்!
துயிலுமிக் குமுகாயம் விழிக்க வேண்டுமே
      துரத்திடும் கேட்டினைத்தான் கரத்தி லடக்கிட!
பயிலுவோம் நல்லொழுக்கம் பண்பு மேவிட
      பாரினி லுயர்ந்திடவே தேவையே ஒழுக்கமே!

உயிரினும் மேலான ஒழுக்க மென்பது
      உண்மையில் தொலைந்துபோய்விட் டதன்றோ யிதனையு(ம்)
உயிர்க்கொலை யென்றேநாம் உரைக்க வேண்டுமே!
      உறவுகள் திரிந்தனவே யொழுக்கக் கேட்டினில்!
நயந்தரும் செல்வமெலாம் நாச மாகிடும்!
      நல்லொழுக் கமில்லையென்றால் நாடும் கெட்டிடும்!
பயன்தரு மறிவுரையைக் கேட்டு நடந்திடில்
      பண்பது வளர்ந்திடுமே பாரில் வென்றிட!

மு. மணிமேகலை

அக்டோபர் 2019
பக்கத்திலிருக்கும் அக்டோபர் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


1 Comment

கா.அமீர்ஜான்(AMEERJAANKAADHAR · அக்டோபர் 8, 2019 at 8 h 08 min

கவிதை இலக்கியம் விருப்பம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

ஏற்றம் தரும் எண்ணங்கள் – எழுத்தாளர் சி.சுரேஷ்

எழுத்தாளர் கவிமுகில் சுரேஷ் அவர்களுடன் தருமபுரி பண்பலை 102.5 சார்பாக ஒளிபரப்பு அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேர்காணல் செய்கிறார். நேயர்களுக்கு வணக்கம் பொதுவாக புத்தகங்கள் என்பது ஒரு மனிதனை செழுமைப்படுத்துவதற்கும் அவரோட வார்த்தையோட உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கும் நம்மளோட அறிவை விரிவு படுத்துவதற்கும் அனுபவத்தை உண்மையான அனுபவங்களில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய தருமபுரியை சேர்ந்த பல புத்தகங்களை படைத்த ஒரு படைப்பாளி நம்ம கூட இருக்கிறார் கவிதைகளை வடித்துக் கொண்டிருக்கிறார் அவர வந்து இன்னைக்கு நிகழ்ச்சிகள்ல சந்திக்க இருக்கிறோம்.

மின்னிதழ்

கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

மின்னிதழ் / நேர்காணல் கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

கரிசல்காட்டு மண்ணில் பிறந்து ஏதுமறியாத பெண்ணாக வளர்ந்து திருமணமாகி இனிமையான திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது கணவரின் எதிர்பாரா மரணம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டாலும் தனது விடாமுயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி தனது மகனைத் தன் கணவர் ஆற்றிய காவல்துறைப்பணிக்கே அனுப்பி,

 » Read more about: கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்  »

மின்னிதழ்

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும்,

 » Read more about: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா  »