பிறமொழி வார்த்தையை கலக்காமல்
தூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா?

உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது. நான் குமளி பழம் சாப்பிட்டேன் என்றால் இன்று பலருக்கும் புரியாது. ஆப்பிள் பழம் என்றால் அனைவரும் இலகுவில் புரிந்து கொள்வர். சீமெந்து என்றால் பைஞ்சுதை என்று இங்கு எத்தனை பேருக்கு தெரியும்? மேசை என்ற போர்த்துக்கேய சொல்லைத்தான் நாம் தத்தெடுத்து தமிழாக நினைத்து பயன்படுத்துகின்றோம். தமிழ் நாட்டு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங் களில் ஆங்கில வார்த்தைகள் தமிழுக்கு நிகராக பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு பலருக்கு ஆங்கிலம் தெரிந்தளவுக்கு தமிழ் தெரியாது என்பது உறைக்கும் உண்மை. இத்தகைய சூழலில் தூய தமிழில் மட்டும்தான் பாடல் எழுதுவேன் என்று கூறுவது ஏமாற்று வேலை. உடை தைக்கும் தையல்காரரிடம் யாராவது தனக்கு பிடிக்காத நிறத்தில துணியை கொடுத்தாலும் தைத்துக் கொடுத்தே ஆகவேண்டும். எனக்கு இந்த நிறம் பிடிக்கவில்லை என்னால் இதனை தைக்க முடியாது என்று சொன்னால் வந்தவர் வேறு தையல்காரரை நாடுவார். அந்த தையல்காரர் நிலைதான் பாடலாசிரியனுக்கும். இங்கு எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

கதைச் சூழலுக்கு என்ன தேவையோ இயக்குனர் இசையமைப்பாளர் எதை விரும்புகிறாரோ அதைதான் நாங்கள் செய்ய வேண்டும். தமிழ் சினிமாவில் நான் இப்படிதான் பாடல் எழுதுவேன் என்று முரண்டு பிடிக்க முடியாது.

எப்படி நான் எழுத வேண்டும் என்று கேட்க வேண்டும். நான் ஆங்கில வார்த்தை கலந்து எழுத மாட்டேன் தூய தமிழில்தான் எழுதுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த வாய்ப்புக்காக பலர் வரிசையில் காத்திருக்கின்றார்கள். தூய தமிழில் பாடல் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் நமது அன்றாட வாழ்வில் தமிழுக்கு கொடுக்கும் இடந்தான் என்ன? ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாய் நினைக்கும் நாம் குறைந்த பட்சம் தமிழர்களுடனாவது தமிழில் பேசுகின்றோமா?

‘குட்நைட்’டில் தூங்கச் செல்லும் எங்கள் இரவு ‘குட்மோர்னிங்கில்’தானே மீண்டும் எழும்புகிறது..

இதழ் முழுவதும் படிக்க இங்கேச் சொடுக்கவும்

தமிழ்நெஞ்சம் – 2019

பக்கத்திலிருக்கும் செப்டம்பர்  2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 


3 Comments

அனுராஜ்.. · செப்டம்பர் 1, 2019 at 13 h 51 min

அருமையான வடிவில்..அழகான உள்ளடக்கங்களுடன்..மிளிர்கிறது தமிழ்நெஞ்சம்.

நிர்மலா சிவராசசிங்கம் · செப்டம்பர் 1, 2019 at 14 h 23 min

சிறப்பான ஆக்கங்களுடன் அருமையான இதழ்! மிக்க நன்றி என் ஆக்கம் இணைத்தமைக்கு

"ஈழவேங்கை" தம்பியின் தம்பி · செப்டம்பர் 6, 2019 at 2 h 33 min

தமிழ் கூறும் நல்லுலகில், ஆகச்சிறந்த முயற்சி, வாழ்த்துகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »