க்ளிக் செய்து இதழைப் பெற்றுக் கொள்ளலாம்!

தமிழ்த்தேன்

மலைத்தேனே! செந்தமிழே உன்நி லைக்கே
மலைத்தேனே! அன்றிந்தத் தமிழ கத்தில்
கலைத்தேனே ஓடமகிழ்ந் தாயே! சில்லோர்
கலைத்தேனே எனவேறு மொழிக லக்க
விலைத்தேனே ஆனாயே! விழித்தே னேநான்.
விரைந்தேனே உனையுநறுந் தேனே யாக்கக்
குலைத்தேனே உனையழிக்குந் திட்டம். : நல்ல
குலைத்தேனே! எழுந்தேனே உனைவ ளர்க்க!

அலைந்தேனே செந்தேனே! உனையு யர்த்த
அழுதேனே துடித்தேனே உன்நி லைக்கே
உலைந்தேனே உனைத்தின்று வாழுங் கூட்டம்
உவகைத்தே னேயுண்ணக் கண்டே நானும்
குலைந்தேனே! தமிழகத்தில் உலகோர் போற்றும்
கொள்கைத்தே னேயில்லார் ஏட்டில் பாட்டில்
கலைந்தேனே எனநீயும் வருந்தல் கண்டே
கனன்றேனே! எடுத்தேனே அறிவு வாளை!

இருந்தேனே! உனையுலகம் விரும்பச் செய்ய
இருந்தேனே! தமிழர்களின் மடநோய் நீக்க
வருந்தேனே! உனையிகழ்வார் தமைய ழிக்க
வருந்தேனே! இடர்நீக்கி உனைக்கா வாமல்
அருந்தேனே நல்லுணவே! கிடைத்தற் கிங்கே
அருந்தேனே! உண்ணவுண்ண நற்சு வையைத்
தருந்தேனே! நல்லுடலை உயிரைக் காக்கும்
தமிழ்த்தேனே! உன்னிடத்தென் உயிர்வைத் தேனே!

புலவர் புங்கனேரியார்


1 Comment

Sakthippuyal · செப்டம்பர் 2, 2017 at 12 h 46 min

சிறப்பு! (நன்றி) Merci!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

ஏற்றம் தரும் எண்ணங்கள் – எழுத்தாளர் சி.சுரேஷ்

எழுத்தாளர் கவிமுகில் சுரேஷ் அவர்களுடன் தருமபுரி பண்பலை 102.5 சார்பாக ஒளிபரப்பு அலுவலர் எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள் நேர்காணல் செய்கிறார். நேயர்களுக்கு வணக்கம் பொதுவாக புத்தகங்கள் என்பது ஒரு மனிதனை செழுமைப்படுத்துவதற்கும் அவரோட வார்த்தையோட உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வதற்கும் நம்மளோட அறிவை விரிவு படுத்துவதற்கும் அனுபவத்தை உண்மையான அனுபவங்களில் இருந்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் பயன்படுகிறது அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய தருமபுரியை சேர்ந்த பல புத்தகங்களை படைத்த ஒரு படைப்பாளி நம்ம கூட இருக்கிறார் கவிதைகளை வடித்துக் கொண்டிருக்கிறார் அவர வந்து இன்னைக்கு நிகழ்ச்சிகள்ல சந்திக்க இருக்கிறோம்.

மின்னிதழ்

கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

மின்னிதழ் / நேர்காணல் கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்

கரிசல்காட்டு மண்ணில் பிறந்து ஏதுமறியாத பெண்ணாக வளர்ந்து திருமணமாகி இனிமையான திருமண வாழ்க்கை சென்றுகொண்டிருந்தபோது கணவரின் எதிர்பாரா மரணம் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டாலும் தனது விடாமுயற்சியாலும் தளராத தன்னம்பிக்கையாலும் வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி தனது மகனைத் தன் கணவர் ஆற்றிய காவல்துறைப்பணிக்கே அனுப்பி,

 » Read more about: கரிசல்காட்டுக் கவிதைச்சாரல்  »

மின்னிதழ்

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும்,

 » Read more about: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா  »