தமிழ்நெஞ்சம் ஏப்ரல் 2020

தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக்கலப்பது தொண்டை யில் சிக்கிய துரும்பு போல இருக்கிறதே. சொல்பருக்கைகள் என்னும் நூலில் விரவியுள்ள மொழிக்கலப்பை தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றியது உண்டா?

‘‘தனித்தமிழ் ஆற்றல் உடைய நீங்கள் அவ்வப்போது பிறமொழிச் சொற்களைக் கலப்பது தொண்டையில் சிக்கிய துரும்புபோல் இருக்கிறதே?’’ – இந்தக் கேள்வி ஒரே நேரத்தில் மகிழ்வையும் துயரையும் தூவுகின்றது.

மகிழ்வுக்கு உங்கள் தனித்தமிழ் பற்றும், துயருக்கு ‘‘தொண்டையில் சிக்கிய துரும்பாக’’ மாறி உங்களைத் தொல்லைபடுத்துகின்றேனே எனும் தன்னிரக்கமும் காரணங்களாகும்.

நான் தொடக்கக் காலத்திலிருந்து தனித்தமிழ் வழியில் வந்தவன் இல்லை, நாற்பது நாற்பத்தைந்து அகவை வரை கலப்புத் தமிழிலேயே புரண்டு கொண்டிருந்தவன் என்ற உண்மையை நேர்மையோடு உங்களிடம் ஒப்புக் கொள்கிறேன்.

திருவாரூர் இயற்றமிழ்ப் பயிற்றகத் தலைமை ஆசான் தனித்தமிழ் நாவலர் த.ச.ஐயாவின் தொடர்பு ஏற்பட்ட பிறகுதான் நான் தனித்தமிழ்ப் பக்கம் திரும்பினேன்.

என்னுடைய மூத்த மகள் பெயர் பவித்ரா. இளையமகள் கலைவாணி. அடுத்த மகன் பெயர் கபிலன். இந்தப் படிநிலை என் தனித்தமிழ் வளர்ச்சிப் போக்கைக் காட்டும்.

இல்லம், மேடை, பொதுவிடங்களில் இயன்ற அளவு தனித்தமிழையே பயன் படுத்துகிறேன்.

நீங்கள் குறிப்பிடும் என்னுடைய, ‘‘சொல்பருக்கைகள்’’ கவிதை நூல் வெளி யீட்டின் போதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசியர் மன்றப் பொதுச்செயலர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம், நூலில் பிறமொழிச் சொற்கள் கலப்பைச் சுட்டிக் காட்டியும், கண்டித்தும் கருத்துரை வழங்கினார் .

அந் நூலில் பிறமொழிச் சொற்களை வலிந்து திணித்திருக்க மாட்டேன்.

  • எதுகை மோனைக்காகப் பயன்படுத்தி யிருப்பேன்.
  • மக்களிடையில் அதிகப் புழக்கத்தில் உள்ள (பிறமொழிச்) சொற்களை, கவிதையின் எளிய புரிதலுக்காக கையாண்டிருப்பேன்.
  • சில சொற்கள் தமிழோடு இரண்டறக் கலந்து விட்டிருப்பதை விலக்காமல் விட்டிருப்பேன்.
  • தமிழா இல்லையா என்ற விவாதத்திற்குரிய சொற்களையும் அரவணைத்திருப்பேன். (கவிதை என்ற சொல் தமிழ்தான் என்பவர்களும் இருக்கிறார்கள். அதை ஒதுக்கிப் பாவலரை மட்டும் பயன்படுத்தும் நண்பர்களும் எனக்குண்டு!)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அளவு எனக்குத் தனித்தமிழ்ப் பயிற்சி இல்லை.அத்திசை நோக்கிப் பயணிக்கவே அவாவு கிறேன். இந்த நேர்காணல் மொழிக்கலப்புப் பயன்பாட்டை என்னிலிருந்து களைய மேலும் உந்து ஆற்றல் தரும் என நம்புகிறேன். நன்றிப்பூச்செண்டு தோழர்!


3 Comments

Niraimathi · ஏப்ரல் 1, 2020 at 3 h 39 min

சிறப்பு, இனிய நல்வாழ்த்துகள்.

Kavibalatamil · ஏப்ரல் 1, 2020 at 10 h 13 min

நான் எதார்த்த கவிஞர். தற்பொழுது பருவத்தின் மிச்சத்தின் உச்சத்தால் “பள்ளி மர நிழல்” எனும் கவிதை நூல் எழுதியிருக்கிறேன். என் கவிதைகள் இந்த தமிழ்நெஞ்சத்தில் வெளியாக ஆவல்

Admin · ஏப்ரல் 6, 2020 at 11 h 46 min

ஆக்கங்களை அனுப்பவும். வரவேற்கிறோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

மின்னிதழ் / நேர்காணல்  தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

தமிழ்நெஞ்சம் சஞ்சிகைக்கான நேர்காணலில் எம்மோடு இணைந்திருப்பவர் ஓர் எழுத்தாளர், நூல் விமர்சகர், பாடலாசிரியர், இலக்கியச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பல துறைகளில் மிளிரும்,

 » Read more about: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா  »

மின்னிதழ்

பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி

மின்னிதழ் / நேர்காணல் முனைவர். சி.அ.வ.இளஞ்செழியன்

ஒருவர் ஒரு திறமையில் சிறந்து விளங்குவதே அரிது. பல திறமைகளில் சிறந்து விளங்குவது அரிதிலும் அரிது. ஒருவர் ஓவியம் வரைகிறார். சிற்பக்கலையில் திறன் பெற்றுள்ளார்.

 » Read more about: பன்முகக் கலைஞராக ஒரு பாவலர் மணி  »

நேர்காணல்

தமிழ்த்தொண்டாற்றும் மருத்துவச் செம்மல்

பொறியியலில் சேர்ந்த முதல்மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மருத்துவப்படிப்பு பயில இடம்கிடைத்தவுடன் அதனைக் கைவிட்டுவிட்டு மருத்துவப் படிப்பைக் கற்று சிறந்த மருத்துவர்களாக வலம் வருவதை நாம் காணலாம். அப்படிப்பட்ட மருத்துவரே இன்று நமக்கு நேர்காணல் வழங்க உள்ளார். ஆம் சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு எதிரில் உள்ள மேடவாக்கம் கல்பனா பல் நோக்கு மருத்துவமனையின் நிறுவனர். அரசு மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் . வாழ்நாள் சாதனையாளர் உட்பட பலவிருதுகளைப் பெற்றவர். தமிழ்க் கவிதைகளை சிறுவயது முதற்கொண்டு எழுதி வருபவர். முனைவர் கவிக்கோ ஜெயக்குமார் பலராமன்