வா வா கண்ணா…

வான்முகில் நிறத்தோய்; கேட்க
          வரம்பல ஈவோய்; தொங்குந்
தார்குழல் காற்ற சைக்கத்
          தாவணி இழுப்போய் ஊதுஞ்
சீர்குழல் ஓசை தன்னில்
          சிந்தையில் கலப்போய் ராதை
கூர்விழி சிக்கும் நேரம்
          குறும்புகள் செய்வோய் வாவா..

நஞ்சினால் மாறும் வண்ணம்
          நால்திசை ஆழி யாகிக்
கஞ்சமுங் காத லிக்கும்
          கனிவுடை எழிலோ சுற்றி
கொஞ்சிடுங் கோபி யர்கள்
          கோர்த்துனை ஓடி ஆடித்
துஞ்சிடும் வியப்பைத் தாருந்
          தூயதோர் அருளோ சொல்லாய்..

எண்ணமே உன்னை எண்ணி
          இவனுமோர் ராதை ஆனேன்
கன்னமே கிள்ளிப் பார்க்கக்
          கனிவுடன் வாவா கண்ணா
கண்துளை மூங்கில் ஆகிக்
          காதலே உன்மேல் கொண்டேன்
என்துயர் தீர்க்கும் வண்ணம்
          இதயமும் தாங்க வாவா..

பெண்துகில் உரிந்த நேரம்
          பேதமை பாரா தங்கே
முன்னருள் செய்தே காத்த
          மூச்செனும் பார்த்தா உன்னை
என்துகில் கொண்டே நாளும்
          இறக்கமே வாழ்வென் றானேன்
கண்துயில் போதும் என்னை
          காத்திட வாவா கண்ணா..

மண்ணுள வாயில் இந்த
          மாபெரும் அண்டங் கொண்டும்
என்னுளம் அதற்குள் உண்டு
          இதையுமே கொஞ்சம் பாராய்
உன்னுளம் இனிக்கும் வண்ணம்
          ஓதுவேன் பாடல் நூறு
பொன்னுளத் தானே வாவா
          பொழுதெலாம் காத்தேன் வாவா..

ஏடி வரதராசன்

பிப்வரி 2020 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

தமிழ்நெஞ்சம் - மார்ச் -2020

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


5 Comments

Vijirkrishnan · மார்ச் 6, 2020 at 5 h 17 min

இதழின் ஒவ்வொரு பக்கமும் அசத்தல்

ஹ.ரெங்கபார்வதி · மார்ச் 6, 2020 at 7 h 38 min

அருமையான மின்னிதழ் படைப்பு,வாழ்த்துகள்

Swarnam Meenakshi nathan · மார்ச் 6, 2020 at 9 h 59 min

அருமை

கோகிலா · மார்ச் 6, 2020 at 11 h 24 min

அழகான வடிவமைப்போடு ! பலரதும் திறன்களை எம்முன் கொண்டுவந்து அளிக்கின்றது இவ்விதழ். அழகு, சிறப்பு !

பாரதி பத்மாவதி · மே 11, 2020 at 6 h 41 min

உலகளாவிய ஹைக்கூ கவிஞர்களின் கைவண்ணத்தில் ஹைக்கூ 2020 மிகச் சிறப்பான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கியதில் மிகப் பெருமை அடைகிறேன் உலக கவிஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »