ஒழுக்கம்

இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்
     இன்றைய குமுகாய மிழந்த தெத்தனை
இயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)
      இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!
உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது
     உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!
செயலிலு மொழுக்கத்தைக் காட்டும் மானிடர்
      செம்மையாய் வாழ்ந்திடுவர் வழிகாட் டி டுவரே!

எத்துறை கண்டிடினும் கையூட் டரசியல்
      எங்கணும் நாள்தோறும் வன்முறைப் பாலியல்
இத்தரை மாந்தரெலா மின்று துன்புறும்
      இழிநிலை வந்ததுவே யிழந்த பண்பினால்!
முத்தமி ழிலக்கியங்கள் முன்னி றுத்திய
      முதுமொழி பின்பற்றும் முறைதா னொழுக்கமாம்!
தத்துவம் பேசுவதால் பயனொன் றுமில்லையே!
      தன்னொழுக் கம்பேணினால் தலைகு னிவில்லையே!

பயிரினை வேலியது மேய்ந்தாற் போலவே
      பண்பிலா மாந்தர்கள் உறவுப் போர்வையில்!
உயிரினைக் காத்திடுவோ(ம்) ஒழுக்க மேன்மையால்!
      உரக்கவே யுரைத்திடுவோம் நீதிக் கல்வியால்!
துயிலுமிக் குமுகாயம் விழிக்க வேண்டுமே
      துரத்திடும் கேட்டினைத்தான் கரத்தி லடக்கிட!
பயிலுவோம் நல்லொழுக்கம் பண்பு மேவிட
      பாரினி லுயர்ந்திடவே தேவையே ஒழுக்கமே!

உயிரினும் மேலான ஒழுக்க மென்பது
      உண்மையில் தொலைந்துபோய்விட் டதன்றோ யிதனையு(ம்)
உயிர்க்கொலை யென்றேநாம் உரைக்க வேண்டுமே!
      உறவுகள் திரிந்தனவே யொழுக்கக் கேட்டினில்!
நயந்தரும் செல்வமெலாம் நாச மாகிடும்!
      நல்லொழுக் கமில்லையென்றால் நாடும் கெட்டிடும்!
பயன்தரு மறிவுரையைக் கேட்டு நடந்திடில்
      பண்பது வளர்ந்திடுமே பாரில் வென்றிட!

மு. மணிமேகலை

அக்டோபர் 2019
பக்கத்திலிருக்கும் அக்டோபர் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


1 Comment

கா.அமீர்ஜான்(AMEERJAANKAADHAR · அக்டோபர் 8, 2019 at 8 h 08 min

கவிதை இலக்கியம் விருப்பம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »