பிறமொழி வார்த்தையை கலக்காமல்
தூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா?

உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது. நான் குமளி பழம் சாப்பிட்டேன் என்றால் இன்று பலருக்கும் புரியாது. ஆப்பிள் பழம் என்றால் அனைவரும் இலகுவில் புரிந்து கொள்வர். சீமெந்து என்றால் பைஞ்சுதை என்று இங்கு எத்தனை பேருக்கு தெரியும்? மேசை என்ற போர்த்துக்கேய சொல்லைத்தான் நாம் தத்தெடுத்து தமிழாக நினைத்து பயன்படுத்துகின்றோம். தமிழ் நாட்டு பத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங் களில் ஆங்கில வார்த்தைகள் தமிழுக்கு நிகராக பயன்படுத்துவதை நான் பார்த்திருக்கிறேன். இங்கு பலருக்கு ஆங்கிலம் தெரிந்தளவுக்கு தமிழ் தெரியாது என்பது உறைக்கும் உண்மை. இத்தகைய சூழலில் தூய தமிழில் மட்டும்தான் பாடல் எழுதுவேன் என்று கூறுவது ஏமாற்று வேலை. உடை தைக்கும் தையல்காரரிடம் யாராவது தனக்கு பிடிக்காத நிறத்தில துணியை கொடுத்தாலும் தைத்துக் கொடுத்தே ஆகவேண்டும். எனக்கு இந்த நிறம் பிடிக்கவில்லை என்னால் இதனை தைக்க முடியாது என்று சொன்னால் வந்தவர் வேறு தையல்காரரை நாடுவார். அந்த தையல்காரர் நிலைதான் பாடலாசிரியனுக்கும். இங்கு எங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை.

கதைச் சூழலுக்கு என்ன தேவையோ இயக்குனர் இசையமைப்பாளர் எதை விரும்புகிறாரோ அதைதான் நாங்கள் செய்ய வேண்டும். தமிழ் சினிமாவில் நான் இப்படிதான் பாடல் எழுதுவேன் என்று முரண்டு பிடிக்க முடியாது.

எப்படி நான் எழுத வேண்டும் என்று கேட்க வேண்டும். நான் ஆங்கில வார்த்தை கலந்து எழுத மாட்டேன் தூய தமிழில்தான் எழுதுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அந்த வாய்ப்புக்காக பலர் வரிசையில் காத்திருக்கின்றார்கள். தூய தமிழில் பாடல் வரவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் நமது அன்றாட வாழ்வில் தமிழுக்கு கொடுக்கும் இடந்தான் என்ன? ஆங்கிலத்தில் பேசுவதை கௌரவமாய் நினைக்கும் நாம் குறைந்த பட்சம் தமிழர்களுடனாவது தமிழில் பேசுகின்றோமா?

‘குட்நைட்’டில் தூங்கச் செல்லும் எங்கள் இரவு ‘குட்மோர்னிங்கில்’தானே மீண்டும் எழும்புகிறது..

இதழ் முழுவதும் படிக்க இங்கேச் சொடுக்கவும்

தமிழ்நெஞ்சம் – 2019

பக்கத்திலிருக்கும் செப்டம்பர்  2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 


3 Comments

அனுராஜ்.. · செப்டம்பர் 1, 2019 at 13 h 51 min

அருமையான வடிவில்..அழகான உள்ளடக்கங்களுடன்..மிளிர்கிறது தமிழ்நெஞ்சம்.

நிர்மலா சிவராசசிங்கம் · செப்டம்பர் 1, 2019 at 14 h 23 min

சிறப்பான ஆக்கங்களுடன் அருமையான இதழ்! மிக்க நன்றி என் ஆக்கம் இணைத்தமைக்கு

"ஈழவேங்கை" தம்பியின் தம்பி · செப்டம்பர் 6, 2019 at 2 h 33 min

தமிழ் கூறும் நல்லுலகில், ஆகச்சிறந்த முயற்சி, வாழ்த்துகள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

சாதிக்கப் பிறந்தவர் – லிடியன் நாதஸ்வரம்

I மின்னிதழ் I நேர்காணல் I  இசை இளவரசர், லிடியன் நாதஸ்வரம்

பதிமூன்று வயதில்,  உலக அளவில் நடத்தப்பட்ட  பியானோ இசைப்போட்டியில் கலந்து கொண்டு,  முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகத் தட்டிச் சென்று,

 » Read more about: சாதிக்கப் பிறந்தவர் – லிடியன் நாதஸ்வரம்  »

அறிமுகம்

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

நேர்காணல்

பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி

பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி உன் முன்னே ஊழி என்பது சிறுதுளி நர்மதா. சென்னை போரூரில் உள்ள சன் பீம்ஸ் பள்ளியின் தாளாளர். 'நல்ல பெண்மணி' என்ற பத்திரிகையை 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தியவர். உடுமலை தனது தாய்வீடு. திருப்பூர் எனது புகுந்தவீடு எனும் இவர், நாற்பது ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இதுவரை எனது 10 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சென்னைப் பெண்களால் 3/3/ 2019..ல் நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டது... இப்போது மிக வெற்றிகரமாக பல நூறு பெண்களுடன் இயங்கி வருகிறது. அதன் நிறுவனரும் இவரேயாவார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம். நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி