மார்ச் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

வாடா மலர்கள்

ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு

போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை
தூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த
பாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – சிவப்புப்
பாதையிலே கரைஞ்சயென் கற்பூரமே – நம்
நாட்டு காளைக்கும் வீரமுண்டு – அப்பப்பா
நாடெல்லாம் நீ விட்டுப்போன சுவாசக்காத்தில்
வீரக்குருதி துடிக்குதப்பா , காதல் ரோமியோக்களின்
வாசனை ரோஜாக்கள் உன் கல்லறைக்
கனவுக்கு காணிக்கையானதப்பா – பாரதத்தின்
காயப்பட்ட தேசத்துக்கு கல்கி மகன் – பிறந்தாச்சு ..!!

வாடா மலருக்கு. வாசனையும் பொறந்தாச்சு
வாழ்க! வாழ்கவென பாரத மைந்தனுக்கு
பேரிகை கொட்டியாச்சு…….!!!
பாரெல்லாம் ஒன்னாச்சு….!!!!

கவிதாயினி. விஜி வெங்கட்
ஹைதராபாத்.


8 Comments

selvakumari · மார்ச் 1, 2019 at 4 h 05 min

மிக அருமை

Saradha k. Santosh · மார்ச் 1, 2019 at 6 h 52 min

வாடா மலர்கள் .. மிக அருமை கவிஞர் விஜி வெங்கட் அவர்களே
.

வி. விஜயலெட்சுமி வெங்கட் · மார்ச் 1, 2019 at 11 h 36 min

தமிழ் தொடர்போடு என்றென்றும் இருக்க வேண்டும்.

Sarabass · மார்ச் 1, 2019 at 13 h 04 min

அருமை அருமை

தமிழ்மாமணி புலவர் வெ.அனந்தசயனம் · மார்ச் 1, 2019 at 13 h 17 min

மிகி அருமை
தமிழ்நெஞ்சம் நெஞ்சில்
மிஞ்சி நிற்கிறது !
வெல்க பணி !
என்றும் வேண்டும்
இன்ப அன்பு !

புதுநகர் செல்லத்துரை · மார்ச் 2, 2019 at 22 h 06 min

‘மீதமிருக்கும் முத்தம்’ எழுத்துப் பிழைகளால் தடக்கி விழுந்து, தொடர்ந்த ஆக்கங்களில் நிமிர்ந்து நடந்தேன்!
தமிழ்நெஞ்சம் வளர்கிறது.

பா.சே.ஆதவன் · மார்ச் 10, 2019 at 12 h 05 min

அருமையான ஆக்கம்… இனிய பாராட்டுகள்!

பா.சே.ஆதவன் · மார்ச் 10, 2019 at 12 h 06 min

அருமை ஆக்கம்… இனிய பாராட்டுக்கள்

நம்பிக்கை நாற்றங்கால் கவிதை….!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »