
மார்ச் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
வாடா மலர்கள்
ஆதி மகன்களின் அறிமுகம் ஆடை வேற்றுமையில்
அந்நிய வாசனை ஓர் பூமி மக்களுக்கு
போர் முகாம்களின் முகவரி கூட தெரியாதவர்
பல்லக்கில் புகழ் சுமக்கும் துதிபாடிகளின்
கைப்பாவைப் பிள்ளைகளாய் பீரங்கியில் தவழும்
கைக்குழந்தைகளாய் வெடிகுண்டில் கோலி
விளையாடும் கோமாளிகள் – குழிபறிக்கும் கள்வர்க்கும்
விதிப்பாட்டில் துதிகோஷ ஓலமிடும்
தற்கொலைப்படை ராஜாக்கள் – தூக்குத் தூக்கிகளை
தூக்கிலிட்டு மார்தட்டி, என் மார் சுரந்த
பாலெல்லாம் நிலத்திற்கு திலகமிட்டு – சிவப்புப்
பாதையிலே கரைஞ்சயென் கற்பூரமே – நம்
நாட்டு காளைக்கும் வீரமுண்டு – அப்பப்பா
நாடெல்லாம் நீ விட்டுப்போன சுவாசக்காத்தில்
வீரக்குருதி துடிக்குதப்பா , காதல் ரோமியோக்களின்
வாசனை ரோஜாக்கள் உன் கல்லறைக்
கனவுக்கு காணிக்கையானதப்பா – பாரதத்தின்
காயப்பட்ட தேசத்துக்கு கல்கி மகன் – பிறந்தாச்சு ..!!
வாடா மலருக்கு. வாசனையும் பொறந்தாச்சு
வாழ்க! வாழ்கவென பாரத மைந்தனுக்கு
பேரிகை கொட்டியாச்சு…….!!!
பாரெல்லாம் ஒன்னாச்சு….!!!!
கவிதாயினி. விஜி வெங்கட்
ஹைதராபாத்.
8 Comments
selvakumari · மார்ச் 1, 2019 at 4 h 05 min
மிக அருமை
Saradha k. Santosh · மார்ச் 1, 2019 at 6 h 52 min
வாடா மலர்கள் .. மிக அருமை கவிஞர் விஜி வெங்கட் அவர்களே
.
வி. விஜயலெட்சுமி வெங்கட் · மார்ச் 1, 2019 at 11 h 36 min
தமிழ் தொடர்போடு என்றென்றும் இருக்க வேண்டும்.
Sarabass · மார்ச் 1, 2019 at 13 h 04 min
அருமை அருமை
தமிழ்மாமணி புலவர் வெ.அனந்தசயனம் · மார்ச் 1, 2019 at 13 h 17 min
மிகி அருமை
தமிழ்நெஞ்சம் நெஞ்சில்
மிஞ்சி நிற்கிறது !
வெல்க பணி !
என்றும் வேண்டும்
இன்ப அன்பு !
புதுநகர் செல்லத்துரை · மார்ச் 2, 2019 at 22 h 06 min
‘மீதமிருக்கும் முத்தம்’ எழுத்துப் பிழைகளால் தடக்கி விழுந்து, தொடர்ந்த ஆக்கங்களில் நிமிர்ந்து நடந்தேன்!
தமிழ்நெஞ்சம் வளர்கிறது.
பா.சே.ஆதவன் · மார்ச் 10, 2019 at 12 h 05 min
அருமையான ஆக்கம்… இனிய பாராட்டுகள்!
பா.சே.ஆதவன் · மார்ச் 10, 2019 at 12 h 06 min
அருமை ஆக்கம்… இனிய பாராட்டுக்கள்
நம்பிக்கை நாற்றங்கால் கவிதை….!!