
மேலுள்ள ஜூன் 2018 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….
திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !
வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியை
ஆய்ந்தாய்ந்து இலக்கியச் சிம்மாசனத்தில்
அமர்ந்தவன் நீ !
நிலாக்கால மேகங்களின் நிழல் யுத்தத்தில்
தாயுமானவனாய் நீ வருவாய் என
காத்திருந்த அறிஞருக்கு எல்லாம்
அறிவொளித் தீபம் ஏற்றியவன் !
பச்சை வயல் மனதுடன் மரக்கால் கொண்டு
மெர்க்குரிப் பூக்களை அளந்தவன் நீ !
உனது பிரம்புக் கூடைக்குள் வைத்திருந்த
பந்தயப் புறாக்களை இலக்கிய வானில்
பறக்கவிட்ட போதெல்லாம்
மௌனமே காதலாகி விழித்துணையோடு
முன்பனிக் காலத்தை எங்களுக்கு
அடையாளம் காண்பித்தவன் நீ !
இராசேந்திர சோழனின் பிறப்பின் பெருமைக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்தவன்….ஆனால் அவனது
இறப்பு பிரம்மதேசமெனும் சிற்றூரில் நிகழ்ந்ததென்று
துடிதுடித்துப் போன வரலாற்று ஆய்வுக் காதலன் நீ !
நாயகன் முதல் புதுப்பேட்டை வரை
நின்புகழ் நிலைத்திருக்கும் திரையுலகில்
உனது அகன்ற விழிகளும் வெண்தாடியும்
குங்குமப் பொட்டோடு உறவாடும் நெற்றியும்
என்றென்றும் எங்கள் கண்முன்னே கொலுவிருக்கும் !
உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு…
பாலகுமாரன் எனும் பெயரோடு !
கா.ந.கல்யாணசுந்தரம்
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
3 Comments
பெண்ணியம் செல்வக்குமாரி · ஜூன் 1, 2018 at 6 h 57 min
அருமையான கவிதை.. மிக்க நன்றி ஐயா..
Vijayalakshmi · ஜூன் 1, 2018 at 19 h 18 min
Great
ஆ.நடராஜன் · ஜூன் 13, 2018 at 7 h 24 min
கண்டேன்
ரசித்தேன்
சிறப்பு.