மேலுள்ள ஜூன் 2018 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு….

திருக்காட்டுப்பள்ளி பழமார்நேரியில்
அருட்சுடர்போல் அவதரித்தவன் நீ…
ஆனந்த வயலில் ஆசையெனும் வேதத்தை
அறவே துறந்த எழுத்துச்சித்தன்
நானே எனக்கொரு போதிமரம் எனும்
தத்துவமாய் வாழ்ந்து இரும்புக்குதிரைகளை
எதோ ஒரு நதியில் நடக்கவிடாமல்
கடற் பாலத்தின் மேல் ஓடவிட்டவன் !
வரலாற்றுச் சான்றுகளின் பின்னணியை
ஆய்ந்தாய்ந்து இலக்கியச் சிம்மாசனத்தில்
அமர்ந்தவன் நீ !

நிலாக்கால மேகங்களின் நிழல் யுத்தத்தில்
தாயுமானவனாய் நீ வருவாய் என
காத்திருந்த அறிஞருக்கு எல்லாம்
அறிவொளித்  தீபம் ஏற்றியவன் !
பச்சை வயல் மனதுடன் மரக்கால் கொண்டு
மெர்க்குரிப் பூக்களை அளந்தவன் நீ !
உனது பிரம்புக் கூடைக்குள் வைத்திருந்த
பந்தயப் புறாக்களை இலக்கிய வானில்
பறக்கவிட்ட போதெல்லாம்
மௌனமே காதலாகி விழித்துணையோடு
முன்பனிக் காலத்தை எங்களுக்கு
அடையாளம் காண்பித்தவன் நீ  !

இராசேந்திர சோழனின் பிறப்பின் பெருமைக்கு
மகுடம் சூட்டி மகிழ்ந்தவன்….ஆனால் அவனது
இறப்பு பிரம்மதேசமெனும் சிற்றூரில் நிகழ்ந்ததென்று
துடிதுடித்துப் போன வரலாற்று ஆய்வுக் காதலன் நீ !
நாயகன் முதல் புதுப்பேட்டை வரை
நின்புகழ் நிலைத்திருக்கும் திரையுலகில்
உனது அகன்ற விழிகளும் வெண்தாடியும்
குங்குமப் பொட்டோடு உறவாடும் நெற்றியும்
என்றென்றும் எங்கள் கண்முன்னே கொலுவிருக்கும் !
உனது எழுத்துக்களின் ஊர்வலத்தோடு…
பாலகுமாரன் எனும் பெயரோடு !

கா.ந.கல்யாணசுந்தரம்

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


3 Comments

பெண்ணியம் செல்வக்குமாரி · ஜூன் 1, 2018 at 6 h 57 min

அருமையான கவிதை.. மிக்க நன்றி ஐயா..

Vijayalakshmi · ஜூன் 1, 2018 at 19 h 18 min

Great

ஆ.நடராஜன் · ஜூன் 13, 2018 at 7 h 24 min

கண்டேன்
ரசித்தேன்
சிறப்பு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »