மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
நேர்காணல்
சோழவந்தான் கவிச்சிங்கம்…
மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..
3 Comments
கவிச்சுடர் கா.ந.கலயாணசுந்தரம் · நவம்பர் 10, 2018 at 0 h 28 min
சிற்பங்கள், கல்வெட்டுகளில் புதைந்திருக்கின்றன நமது பாரம்பரிய தொன்மை என்பதை அறிந்து தமது லட்சியமாகக் கொண்ட சசிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.தென் தமிழகக் கோயில் பலவற்றுக்கு சென்று வந்த நானும் இதைப்பற்றி பலமுறை யோசித்தது உண்டு.சிறப்பான நேர்காணலில் பலருக்கு கல்வெட்டுகள் மீதான ஈர்ப்பை ஒரு விழிப்புணர்வு கட்டுரையாக அளித்துள்ளார் சகோதரி சாரதா அவர்கள்.எனது பாராராட்டுகள்.தொடர்ந்து தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் இதுபோன்ற நேர்காணல்களை கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற நேர்காணல்களை ஆவணப்படுத்த வேண்டும்.
பாலசுப்ரமணியம், மடிபாக்கம் · நவம்பர் 10, 2018 at 0 h 34 min
முதல் பேட்டி, முற்றிலும் அற்புதமான, அர்த்தமுள்ள, ஆணித்தரமான, கேள்வி ? (வாசகர் கேள்வி போல்*** வாசகராகவும், கவிஞராகவும் இருப்பதால் ஒவ்வொரு கேள்வியும் 100 மதிப்பெண்) பூர்வீகம் , சிற்பத்தின் மேல் முதல் காதல், தற்போதைய நிலை, சிலைதிருட்டு, சமீபத்திய ஆய்வு சுற்றுலா, சந்தித்த சவால், எதிர்கால இலட்சியம், செய்த பணியின் ஆவணம், எழுத்து சித்தர்பாலகுமாரன் பற்றிய, எதிர்காலத்தில் திட்டம், நன்றி யாருக்கு, இளைஞர்களுக்கு, அருமையான, வசீகரமான தலைப்பில் தொடங்கி, நேர்த்தியான, அழுத்தமாக, ஆணித்தரமாக, கையாண்ட விதம் படிக்காதவரையும், படிக்க தூண்டும் நேர்த்தியான பதிவு. இதுவும் எனக்கு புதிதல்ல என்பது போல் நிருபர் பணி முதல் பேட்டி அருமை, தொடரட்டும், அடுத்த கட்டம், வெற்றி அடைந்தவர்களை அனுதினமும் வாழ்த்துவதில் தப்பில்லை. வாருங்கள் வாழ்த்துவோம், பேட்டி எடுத்தவர், கொடுத்தவர், இதழை அச்சிட உதவிய பதிப்பகம் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
Dr.Surya · நவம்பர் 10, 2018 at 0 h 37 min
படித்து பிரமிப்பு அடைந்தேன்!
கல்வெட்டு ஆவணங்களையும், கலை திறத்தையும் காதலிக்கும் ஒருவரை தமிழ் நெஞ்சங்களில் பதியும் வகையில் ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்!
நன்றியும் வாழ்த்துக்களும்!