மேலுள்ள ஜூலை 2018 தமிழ்நெஞ்சம் இதழ் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

 

<div data-configid=”16979909/62858972″ style=”width:100%; height:286px;” class=”issuuembed”></div>

<script type=”text/javascript” src=”//e.issuu.com/embed.js” async=”true”></script>

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

தாலாட்டிப் பாலூட்டிப்
பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
அறிவுருத்த மறப்பதில்லை!

உயிரிருந்தால் போதுமென்ற
உணர்வுடனே இருப்பதில்லை!
உயிருக்குள் உனைவைத்த
உள்ளுணர்வைச் சொல்வதில்லை!

தந்தையிவர் எனக்காட்டும்
தாய்மட்டும் உயர்வில்லை!
சிந்தையிலே சிறைவைத்த
தந்தைக்கோ நிகரில்லை!
.
பாவலர் அருணா செல்வம்

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


3 Comments

selvakumari · ஜூலை 1, 2018 at 10 h 05 min

பாவலர் அருணா செல்வம் கவிதை மிக அருமை.

Mullai · ஜூலை 1, 2018 at 12 h 54 min

கவிதை சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்.

A.Arputha Roslin · அக்டோபர் 1, 2018 at 5 h 37 min

பாவலர் அருணா
தந்தைக்கு நிகர் யாருமில்லை
அருமை..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

சாதிக்கப் பிறந்தவர் – லிடியன் நாதஸ்வரம்

I மின்னிதழ் I நேர்காணல் I  இசை இளவரசர், லிடியன் நாதஸ்வரம்

பதிமூன்று வயதில்,  உலக அளவில் நடத்தப்பட்ட  பியானோ இசைப்போட்டியில் கலந்து கொண்டு,  முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாகத் தட்டிச் சென்று,

 » Read more about: சாதிக்கப் பிறந்தவர் – லிடியன் நாதஸ்வரம்  »

அறிமுகம்

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

நேர்காணல்

பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி

பெண்ணே நீ வேலியற்ற பெருவெளி உன் முன்னே ஊழி என்பது சிறுதுளி நர்மதா. சென்னை போரூரில் உள்ள சன் பீம்ஸ் பள்ளியின் தாளாளர். 'நல்ல பெண்மணி' என்ற பத்திரிகையை 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தியவர். உடுமலை தனது தாய்வீடு. திருப்பூர் எனது புகுந்தவீடு எனும் இவர், நாற்பது ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இதுவரை எனது 10 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகின்றன. சென்னைப் பெண்களால் 3/3/ 2019..ல் நமது பெண் அமைப்பு தொடங்கப்பட்டது... இப்போது மிக வெற்றிகரமாக பல நூறு பெண்களுடன் இயங்கி வருகிறது. அதன் நிறுவனரும் இவரேயாவார். இனி நேர்காணலுக்குள் நுழைவோம். நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி