கவிதை

எதைப் புணரத் தடவுகிறாய்?

என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.

மார்புகளும் புடைத்திருக்கவில்லை
இடையும் மெருகேறியிருக்கவில்லை
மாதவிலக்கும் வரும் வயதும் எனகில்லை

உடல் தெரிய அரைகுறை ஆடை அணியவில்லை
கண்ணால் கவர்ச்சி வலை வீசவில்லை
ஆணினித்தை பழிக்கவில்லை
பெண்ணியம் பேசவில்லை
புரட்சி காரியும் நானில்லை
அகங்காரமும் கொள்ளவில்லை
ஆணவ செருக்கும் எனக்கில்லை
திமிர் பேச்சும் பேசவில்லை
சரிசமமும் கேட்கவில்லை
பெண்ணுரிமை சட்டமும் பேசவில்லை
பெண்ணிய கவிதைகளும் எழுதவில்லை
அடக்குமுறை பற்றியும் உரையாற்றவில்லை
பெரியாரிசமும் உணர்த்தவில்லை
எதிர்த்து பேசவும் தைரியமில்லை

சாதி கலவரமும் நடக்கவில்லை
இன சண்டைகளும் வரவில்லை
மதமும் மாறவில்லை
இலங்கை பெண்ணும் நானில்லை
நுனி நாக்கு ஆங்கிலமும் பேசவில்லை
நடுஇரவில் எங்கும் செல்லவும் இல்லை

திங்க சோறும் கேட்கவில்லை
பழைய உடுப்பும் தேவையில்லை
பணங்காசும் திருடவில்லை

கலவி குறித்தும் அறிந்திருக்க வில்லை
சூழ்நிலை தாக்குதலும் நடத்த தெரியவில்லை

ஏன் என்னை தவறாக நெருங்குகிறாய்
வன்புணர்வு செய்ய முயற்சிக்கிறாய்

என் பிஞ்சு அங்கங்களுள்ள என்னில் எதை
புணர தடவுகிறாய்.

 » Read more about: எதைப் புணரத் தடவுகிறாய்?  »

By சீதா, சென்னை, ago