ஹைக்கூ

ராஜகவி ராகில் – கவிதைகள்

பெண் விடுதலை பற்றி
பேசியவன் பையில்
வீட்டுச் சாவி

ஓடையாக இருந்தாலும்
உன்னை நதியாக்குகிறது
நம்பிக்கை
நம்பிக்கை உதிர்கின்ற போதுதான்
நிகழ்கிறது
முதல் மரணம்

நிலம் உழுகின்ற
உழவனைகிழித்து விடுகிறது
சமூக ஏர்

பூமிக்கு மேல்
புதை குழி
கட்டில்

உழவனை
நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது
நெற்கதிர் கூட

ஏழையைச் சாப்பிட்டு
ஏப்பமிடுகிறது
சோறு

 » Read more about: ராஜகவி ராகில் – கவிதைகள்  »

ஹைக்கூ

கவிநுட்பத் துளிப்பாக்கள்

1

” பாட்டியின் சேலை…!
கிழிந்தும் உதவியது
பேரனுக்கு தொட்டில்”

2

குழந்தையை சுமந்தாள்
கூடவே ஒட்டிக்கொண்டது
தாய்மை

3

மலர்ந்தது ரோஜா
பறிக்கும்  முன் முத்தமிட்டது
வண்ணத்துப் பூச்சி

4

மரத்தில் குழந்தை சிற்பம்
அணைத்து முத்தமிட்டாள்
குழந்தை இல்லா தாய்

5

புதுமைப் பெண்ணோ
தனிமையில் செல்கிறது
நிலா

6

“நட்சத்திரம் சிரித்ததோ
சிதறிக் கிடக்கிறது
மெரீனாவில் முத்துக்கள்”

 » Read more about: கவிநுட்பத் துளிப்பாக்கள்  »

ஹைக்கூ

குறுங்கவிதைகள்

இந்த வருட
ஒவியப் போட்டியில்
முதல் பரிசு கிடைத்திருக்கிறது
உன் பாதச்சுவடுக்கு.

உன்னை சுமந்து
செல்கிற சந்தோசத்தில்
தேய்ந்து போகிறது
செருப்பு.

ஒடுக்கபட்டவன் என்று
ஒதுக்கியது
சர்க்கார் மட்டுமல்ல
சமுதாயமும் தான்

குப்பைத்தொட்டிதானே என்று
கேவலமாக நினைக்காதீர்
அது பல குழந்தைகளுக்கு
கருவறை

பாவம்!

 » Read more about: குறுங்கவிதைகள்  »

ஹைக்கூ

நிழல்கள்

1.

வாழும் கடவுளை
வீதியில்
விட்டு விட்டு
கோவிலில் தேடுகிறான்
“இல்லாத கடவுளை ”

2.

நிழல் தரும் மரங்கள் தான்
நிம்மதியை தரும் என்பதை
எப்போது உணர போகிறான் ??

 » Read more about: நிழல்கள்  »

கவிதை

பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்

அனாதையாக கிடக்கிறார்
கோடிகளின் அதிபதி
சாலை விபத்து  !

பயண களைப்பு
நிழல் தேடுகிறான்
விறகுவெட்டி  !

சாலையில் பணப்பை
மரித்து போனது
மனசாட்சி  !

 » Read more about: பிரேம் _ன் ஹைக்கூ துளிகள்  »