கதை

நன்றியுள்ள நாய்

escroc79w
ஒரு ஊரில் கந்தன் என்பவர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார், அவர் ஒரு விவசாயி, அவருக்கு குழந்தை இல்லை. ஆனால், அவர் ஒரு பெண் நாயை வளர்த்து வந்தார்.

 » Read more about: நன்றியுள்ள நாய்  »

கதை

நாக தேவதை

ஒரு காலத்தில் வெள்ளை பாம்பு, பச்சை பாம்பு இரண்டும் இர்மை (Er-mei) என்ற மலையில் வாழ்ந்து வந்தன. அங்கு வாழ்ந்த காலத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மந்திர ஆற்றல் கிடைத்தது. அதனால் அவை தங்களை இரண்டு அழகிய இளம் பெண்களாக மாற்றிக்கொண்டன.

 » Read more about: நாக தேவதை  »

By Admin, ago
கதை

சமூக தளம் …

“எனக்கு அதுதான் காதல்ன்னு தோணிச்சு. அதுதான் இதுகெல்லாம் காரணமா மாறிடிச்சுன்னு நெனைக்கிறேன். எல்லார்கிட்டேயும் மன்னிப்புக் கேட்டேன். எல்லாரும் அவங்க மட்டும் நல்லவங்க போலேயும் நான் மட்டும் கெட்டவள் போலேயும் என்னை ரொம்ப உதாசினப் படுத்திட்டாங்க. எதோ தீராத நோய் வந்தது போலப் பார்க்கிறாங்க. நீ மட்டும்தான் குமுதா, எதுக்குடீ எங்கிட்ட மன்னிப்பு எல்லாம் கேட்கிற?. அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்னு கேட்டே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு. ஒரு நாள் என் வீட்டிற்கு வற்றியா?”

கதை

மறதி

ராமுவுக்கு ஞாபகமறதி அதிகம். ஆனால் அதை அவன் ஒப்புக் கொள்ளவே மாட்டான்.

ஒருநாள் அவன் வாக்கிங் போகும்போது ஒரு போர்டைப் பார்த்தான்.

‘டாக்டர் பூதலிங்கம் – மனோதத்துவ நிபுணர்’.

 » Read more about: மறதி  »

உருவகம்

இறைவன் சிரிக்கிறான் !

‘இறைவா இது என்ன புதுமை? உலகையே கபளீகரம் செய்த என்னால் இந்த அற்பக் கோரைப் புல்லை அசைக்க முடியவில்லையே! இதன் மர்மமென்ன? எல்லாச் சக்தியிலும் பார்க்க என் பலமே மேலென்று எண்ணிக்கொண்டிருந்த எனக்கு ஏன் இந்தத் தோல்வி? என் சக்தியில் என்ன குறைபாடு?’ என்று புயல் கேட்டு அமைதியடைந்து அடங்கிவிட்டது. எங்கும் நிசப்தம். புயலின் கோரத் தாண்டவத்தாலும் அதன் அட்டூழியத்தாலும் அழிந்து கிடந்த அண்டம் அழுதுகொண்டிருந்தது. எல்லாச் சக்திகளுக்கும் மேலான சக்தியான இறைவன், புயலின் பிரார்த்தனையில் நேத்திரங்களைத் திறந்து அண்டத்தைப் பார்த்தான். விரல் நொடிக்கும் நேரம்...

கதை

உறங்கும் உண்மைகள்

‘ஏன் சாமியாரே ஆணும் பெண்ணும் நட்பாக இருக்கக் கூடாதா? ஊடனேயே காதல் கடிதம் எழுதுவதா? இப்போது காதலிப்பார்கள். பின்பு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சீதனம் வேண்டும் என்று கூறிவிடுவர். காதலாவது கத்தரிக்காயாவது? ஆனானப்பட்ட இராமனே சீதையை நெருப்பில் குதிக்கச் சொன்னவர் தானே? மனைவியைப் பணயப் பொருளாக வைத்து சூதாடி அரசவையில் சேலையை உரியும்போது மௌனமாயிருந்தவர் தருமபுத்திரர்..’ என்பாள். மைதிலியின் வார்த்தைகளைக் கேட்ட சந்திரன் தன் காதலை மனதுக்குள்ளேயே வைத்துப் பூட்டிவிட்டார். பின்பு இருவரும் சகஜமாகப் பழகினார்கள். அவர் பட்டயக் கணக்காளராக பதவி பெற்றார். மைதிலி ஒரு ஆசிரியராகி, வேறு ஊரில் உள்ள பாடசாலைக்குச் சென்றுவிட்டாள்.

கதை

பரீட்சை நேரம்…

நாளைக்கு எக்கொனொமிக்ஸ் எக்ஸாம் எனக்கு, லைபிரரில புத்தகத்தோட சண்டை போட்டுக்கொண்டிருந்தன். எப்பவும் கடைசி நேரத்தில கஸ்டப்பட்டுகொண்டு நிற்கிறதுதான் என்டபழக்கம். இந்தபழக்கத்தை மாத்தணும் எண்டு விருப்பம்.. பல நாள் முயன்றும் முடியாமை.. இப்போது முயற்சியே செய்வதில்லை.

 » Read more about: பரீட்சை நேரம்…  »

By விஷ்ணு, ago
கதை

என்மேல் விழுந்த உளி

“கணக்கு ஆசிரியர் விஷயத்தில் நீ சந்தோஷப் படவேண்டும் என்றேன். எத்தனையோபேர் மீது அக்கறை எடுத்துகொள்ளாத பல ஆசிரியர்கள் உள்ளபோது உன் மீது அக்கறை எடுத்துக்கொள்ளும் கணக்கு ஆசிரியரை நீ பாரட்ட வேண்டும். அவர் உன்னை யார் என்று தெரிந்திருக்கிறார் உன்னை கேள்வி கேட்பதன் மூலம் உனது முன்னேற்றத்தை கவனிக்கிறார் என்று அர்த்தம். இப்படி ஒரு நல்ல ஆசிரியர் இருக்கும்போது நீ கவலைப் படவேண்டாம். அதிக நேரம் எடுத்து பயிற்சி செய் முயற்சி செய்தவன் தோற்றதில்லை. ஆசிரியர் சொல்லும் எதையும் நேர்மறையாக எடுத்தக்கொள் “ என்று சொல்லிவைத்தேன். நாராயணனுக்கு புரிந்ததோ இல்லையோ நான் ஒரு நம்பிக்கையை அவனுள் விதைத்தாகவே எண்ணினேன்.

உருவகம்

பிள்ளையாரும் பீட்டர் ஜோன்சும்

வேகமாக தன் சாப்பாட்டுக்கூடைக்குள் கையை விட்டு துழாவிக்கொண்டே “நான் இங்க ப்ரேயர் பண்ண வரல” என்று தீர்க்கமாக சொன்னவன் டிபன் பாக்சை வெளியிலெடுத்து மெதுவாக தன் பல் இடுக்கில் வைத்து நெம்பி அதிலிருந்து சில பருக்கைகளைக் கையிலெடுத்து அந்த பிள்ளையார் சிலையைச் சுற்றி இருந்த சின்னச் சின்ன எறும்புப் புற்றுகளுக்கு முன் வைத்துவிட்டு மீண்டும் மாமியிடம் சொன்னான் “கலை இங்க தினமும் சாப்பாடு வைப்பான், இன்னைக்கு வைக்காம விட்டா எறும்பு பாவம்தான? பசிக்குமே,..அதுக்குதான் வந்தேன்”.

கதை

இனப் படுகொலை

சின்னாவுக்கு மூளை நரம்புகளுக்குள் ரத்தம் கசிந்து தலை வெடித்துவிடும் போல் இருந்தது,

துடிக்கிறதா இல்லை நடிக்கிறதா என்று சந்தேகம் எழும் படி அவன் இதயம் கொஞ்சம் நின்று நின்று துடித்தது. பாவம் அந்த சின்ன இதயம் அதுவும் எத்தனை துன்பங்களைத்தான் தாங்கும்.

 » Read more about: இனப் படுகொலை  »

By இரா.அ, ago