கவிதை
ஒப்பனை கலைகிறேன்
நட்பும் சொந்தமும்... சிதறிப் போனது இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம் நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள கடைசியாய் அழுது கொள்கிறேன்
நட்பும் சொந்தமும்... சிதறிப் போனது இனி தாய் வீட்டிலும் நான் விருந்தாளியாம் நாற்றங்கால் மாற்றி நடவு ஆகிறது போராடிக் கற்க வேண்டுமே பொருந்திக் கொள்ள கடைசியாய் அழுது கொள்கிறேன்
" தாயுடன் தாரமும் ------ தக்கதோர் வாழ்வினைச் சேயுடன் சேர்ந்ததே ------ செல்வம் தரும்வாழ்க்கை . நோயுடன் நின்றிடில் ------ நோகாமல் சேவைசெய்யும் தாயுடன் தாரமும் ------ தருவரே நேசத்தை ."
தாய்மைக்கென்று தனி புகழில்லை // விலங்கும் தாயாகும் வியப்பில்லை // பெண்ணுக்குத்தாய்மை இயல்புநிலை // தாயா தாரமா பிரிப்பது பொருத்தமில்லை//
மதம் நம்மிடையே விரோதத்தை வளர்க்க எங்களுக்கு கற்றுத்தந்ததில்லை நாம் இந்தியரே, ஹிந்துஸ்தானமே நமது தாயகம். உலகின் மிகப் பழமையான கிரேக்கம் எகிப்து ரோமானிய நாகரிகங்கள் எல்லாம் சுவடேதுமின்றி காணாமல் போனாலும் எமது சொந்த அடையாளங்கள் மட்டும் இன்றும் நிலைத்திருக்கின்றன.
அழகான கண்ணிமைகளில் ... அழுகைப்பூ பூத்திருக்கு !... விட்டுச்சென்ற உறவுகளெல்லாம் ... விண்ணிலே பூத்திருக்கு !... தனித்த வெண்ணிலவாய் ... வெள்ளிகளின் மத்தியிலே .. உண்ணா நோன்பிருந்து ..நீ , உடல் வருத்தி லாபமென்ன ?...
விழியாலே கதைசொல்லும்
வெள்ளிநிலவே! உந்தன்
மொழிசொல்லும் கவிதையுமே
மெளனம்தானோ? வீணாய்ப்
பழிபோடும் எண்ணத்தின்
பார்வையிது, விழியில்
வழிகின்ற கவர்ச்சியிலே
வழிமாறும் மனமும்தான்.
கன்னத்தில் கைவைத்தக்
காரிகையே!
செயற்கையாகிப் போன புன்னகையைக் கண்டு தாழ்வு உணர்ச்சிகள் நீளுகின்றன! விரக்தியின் உச்சப் படியில் நின்று கதறி சோகமாய் முகாரி இசைக்கிறது என் இயலாமை!
மொட்டிரண்டுப் பூத்திருக்கு
முறுவலையே காட்டிருக்கு,
கட்டிவெல்லக் கன்னமதில்
கனிமுத்தம் நாட்டிருக்கு.
சின்னஞ்சிறு பூக்களிங்கே
சித்திரமாய்ச் சிரித்திருக்கு,
வண்ணமலர்க் கோலமிட்டு
வானமதைப் பறித்திருக்கு.
பட்டுப்போன்ற மென்மையிலே
பளபளப்பாய்ப் பார்த்திருக்கு,
உள்ளத்தில் உரத்தை ஏற்றியது உறுதி கொண்டு விண்ணை நோக்கியது உற்சாகக் குருதி உடலை கிளர்ந்தது நம்பிக்கை ஒளி கொந்துதலால் தும்பிக்கை பலம் உந்துதலால் எம்பி எம்பி உயர எழுந்தது எதிர்படு இடர்களை கடந்தது எதிர்நோக்கு உச்சியை எய்தது
தமிழருக்கே இரண்டகத்தை செய்யும் பேதை திசையெட்டில் வாழ்வதற்கு விடவே வேண்டாம் தமிழ்மானம் இல்லாதான் வாழு தற்கு தகுதியில்லான் என்பதினை எண்ண வேண்டும் தமிழ்மானம் இல்லாதார் தமிழ கத்தில் திராவிடத்து நச்சுதனை நுழைய விட்டு தமிழ்மண்ணை மாசாக்கும் செய்கை தன்னை தணலெனவே நிமிர்ந்திங்கே எதிர்க்க வேண்டும்